மரக்காணம்
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, மரக்காணம் அருகே தனது தாத்தா வீட்டில் திடீரெனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சொல்ல முடியாத சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது!
சவுக்கு சங்கரின் மனைவி ஆர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கணவன் – மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது மகன் தியோ ஆழிசை விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தான். மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், தாயைப் பிரிந்த ஏக்கத்தில் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டுள்ளான்.
தாயைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், சில நாட்கள் அவருடன் தங்கிவிட்டு நேற்று முன்தினம் மீண்டும் நடுக்குப்பம் கிராமத்திற்குத் திரும்பியுள்ளான். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்குக் கிளம்பச் சொல்லித் தாத்தா, பாட்டி கூறிய நிலையில், வீட்டின் பின்பக்கம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்து சென்று பார்த்தபோது, அங்குள்ள வேப்பமரத்தில் சிறுவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அவர்கள் கதறித் துடித்துள்ளனர். உடனடியாக மரக்காணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிதாபமாகத் தெரிவித்தனர். தாயைப் பிரிந்த ஏக்கம் மற்றும் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாத காரணத்தாலேயே சிறுவன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக மரக்காணம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
#SavukkuShankar #TheoAzhisai #Marakkanam #TamilNews #ViralNews #TNNews #RIPTheo #SavukkuShankarSon #TamilNaduNews #TrendingTN #LatestNewsTN #CrimeNewsTN #YouTuberSavukkuShankar