பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்கள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வுநிலை) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025.11.21 ஆம் திகதி முதல் தாக்கம் செலுத்திய திட்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு 2025.11.28 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தல் ஊடாக முழு இலங்கைக்கும் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டதுடன், அன்றைய தினம் அனர்த்த நிவாரண சேவை சுற்றறிக்கையின் 03/2025 ஊடாக 2025.11.21 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் இலங்கை முழுவதும் அனர்த்த நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைமளித்தல், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கல்,முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்கல்,பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கல் உட்பட பல நிவாரணங்கள் 2025.12.05 ஆம் திகதி வெளியிடப்பட்ட செலவு சுற்றறிக்கை 08./2025 ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டிலுக்காக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நிவாரணம் வழங்கலுக்காக சம்பந்தப்படும் நிறுவனங்களின் பொறுப்புக்கள்.

இந்த சுற்றறிக்கை ஊடாக நிச்சயிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் நிவாரணத்துக்கமைய அனர்த்த சேவை வழிகாட்டல், 01/2025,2,1 பிரகாரம் கிராமிய அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவை குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு காணப்படும் மாதிரிகளுக்கு மேலதிகமாக நிர்வாக கிராம சேவகர்,

சமூக சேவை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,சிறுவர் காப்புறுதி உத்தியோகத்தர்,வயது முதிர்ந்தோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறு வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர், பௌத்த விவகார உத்தியோகத்தர்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வீடமைப்பு உத்தியோகத்தர், ஏனைய துறை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் நிவாரணம்

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்வதற்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். சொந்த வீடு மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதி

2025.11.21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் முழுமையாக சேதமடைந்த வீடு, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பகுதியளவிலான பாதிப்பு, வீட்டுக்கு சேதம் ஏற்படாத பட்சத்தில் வெள்ளம், சூறாவளி, மண்சரிவு ஆகிய தாக்கங்களில் அசுத்தமடைந்த வீட்டை துப்பரவு செய்வதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

காணியின் உரிமை

காணியின் உரிமை மற்றும் வருமானம் ஆகிய காரணிகளை கருத்திற் கொள்ளாமல் இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும்.சொந்த வீடு,வாடகை வீடு, சட்டவிரோத குடியிறுப்பாளர்கள், அரச உத்தியோகபூர்வ வீடுகளில் வசிப்போருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் கொப்பிகள்,எழுதுவினை பொருட்கள் மற்றும் சீறுடைகளை கொள்வனவு செய்வதற்கு ஒருதடவை மாத்திரம் ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட வகையில் பரிந்துரை செய்யப்படும் மாதிரி 2.7 விண்ணப்பத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டு 2.7.1 (பிரிவு) மாதிரி ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக மாவட்ட செயலாளர் காரியாலயத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கொடுப்பனவை வழங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் பெயர் பட்டியல் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வாடகை வீட்டில் வசிக்க ஆறு மாத காலத்துக்கு 25 ஆயிரம் ரூபா

மண்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு பாதிப்பால் வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் புதிய வீட்டை நிர்மாணித்துக் கொள்ளும்வரை பிறிதொரு இடத்தில் குடியிறுப்பதற்கு 25 ஆயிரம் ரூபா ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படும்.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வசிப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என்று அறிவுறுத்தப்பட்ட பகுதியில் வசித்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வாடகை வீட்டில் வசித்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படாது.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக