பாணந்துறையில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிங்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளான 37 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்ட நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பிங்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.