படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம் – தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் பொலிஸார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் அண்மை காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரைன் பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் பொலிஸார் தீவிரமாக தேடினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூபா 25 இலட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் பொலிஸ் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.!

ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் குருகுல சனசமூக நிலையத்தில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் இன்றையதினம்(14) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனால் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால பயணங்கள் மற்றும் மற்றும் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர் அணி என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

arr

கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைத் தாக்கியவர் கைது

December 15, 2025

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர்

Baby death

பீப்பாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

December 15, 2025

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் (Barrel) ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக

bre

பிரேசிலில் முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

December 15, 2025

முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில்

mora

மொராக்கோவில் கனமழை; 21 பேர் உயிரிழப்பு

December 15, 2025

மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின்

rob

ஹாலிவுட் இயக்குநரும் அவரது மனைவியும் கொலை!

December 15, 2025

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில்

thai

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் துப்பாக்கி சூடு

December 15, 2025

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே

den

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம்

December 15, 2025

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போர் எவராக

neth

மண்சரிவில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

December 15, 2025

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மதியம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவ, தென்னவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்

mu

மியூனிச் – மைன்ஸ் போட்டி சமநிலை!

December 15, 2025

ஜேர்மனிய தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மைன்ஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

gell

நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளது!

December 15, 2025

மேற்கத்தேய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ma

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

December 15, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக

ju2

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

December 15, 2025

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல்