நாம் ஏற்றுகின்ற சுடர் உயிரிழந்த தியாகிகளுக்கு கௌரவமாகவும் எம் அரசியல் எதிரிகளுக்கு விழிப்பையும் உண்டாக்க வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் அறிவோம்.இது வெறும் நிகழ்வு அல்ல என்பதும் எமக்கு தெரியும்.இது எமது வலிகளுக்கான அரசியல் திசை காட்டி. மக்களின் அரசியல் வலிமையையும் அதற்கான மக்கள் திரட்சியையும் உலகிற்கு காட்டி நிற்கும் மக்கள் தளம்.

ஆனால் அரசியல் வலி சுமந்து 17வது ஆண்டினை தொட்டு நிற்கின்ற வேளையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? எந்த அரசியல் திசையை நோக்கி பயணிக்கின்றோம்? அரசியல் வலி சுமக்கும் ஓர் இனமாக மக்கள் அரசியலை பலமடைய செய்வதற்கும், எம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக எம் மக்கள் பலத்தை எந்த அளவிற்கு காட்டி உள்ளோம்? என்பதற்கான விடை தேடுகின்ற போதுதான் நாம் ஏற்றுகின்ற சுடர் உயிர் தியாகிகளுக்கு கௌரவமாகவும், எம் அரசியல் எதிரிகளுக்கு அரசியல் விழிப்பையும் ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமது விடயத்திலும் தோல்வி கண்ட அமைப்பாகவே தெரிந்த போதிலும் எம்மவர்கள் அங்கு செல்வதை புனித யாத்திரையாக்கி ஒவ்வொரு வருடமும் பயணிக்கின்றனர். அதிலும் கூட்டு தன்மை கிடையாது. தனித்தனியாக சொர்க்கம் போக நினைப்தாகவே தெரிகிறது .ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கடிதம் எழுதுவதிலும் இதே நிலையே தொடர்கின்றது.

கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் தொடங்கி அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்களின் முயற்சி , தமிழ் சட்டத்தரணி களின் முயற்சி எல்லாமே தோல்வியாகவே நாம் காண்கின்றோம்.

எமது அரசியல் விடயத்திலும் சர்வேச ராஜதந்திரிகளை கையாள்வதிலும் நாம் இருளில் நடப்பதாகவே தெரிகிறது. அவர்கள் எமக்கு பாடம் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள், மாவீரர் தின நிகழ்வுகள் எல்லாம் கோயில் திருவிழாக்களாகியுள்ளதாகவே பலர் கருதுகின்றனர். திருவிழாக்கள் உபயக்காரர்களைப் போல ஒழுங்கமைப்பாளர்கள் அவற்றை தத்தமது அடையாளத்திற்கான காட்சிகளாக்கி மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போதை நிலைக்கு தள்ளுவதை என்னவென்று கூறுவது?

கடந்த 17 ஆண்டுகளாக தமிழர் தாயக அரசியலை மக்கள் மையப்படுத்தி பலமடையச் செய்வதில் பெரும்பாலான அரசியல் தலைமைகள் அரசியல் தடம் புரண்டு, அரசியல் அறம் விலகி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் எனலாம். அவர்களை தமிழர்களின் குருதி தோய்ந்த நிலத்திற்கு அழைத்து வந்து செங்கம்பலம் விரித்து மேள தாள ரகத்தோடு மேடைக்கு அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாது செல்ஃபி எடுத்து மகிழும் தலைமுறையினரும் உருவாகியுள்ளமைக்கு நாமே காரணம் என சிந்திக்காதும் உள்ளனர்.இதுவே எமது அரசியல் அவலம்.

இது இவ்வாறிருக்க முள்வாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பகிரப்படும் கஞ்சியில் சுவை தேடும் கூட்டமும் உருவாகியுள்ளதோடு, சுவையூட்டுவோரும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தின நிகழ்வுகள், தியாகிகள் தினம் தொடர்பில் வடக்கு கிழக்கு தழுவிய பொது கட்டமைப்பு உருவாக்கப்படுதலும் அதன் அரசியல் வழிதடமும் வரையப்படல் வேண்டும்.அத்தோடு மேற்கூறிய நிகழ்வுகளுக்கான பொது விதிகளும் மக்கள் மயப்படுத்தலும் வேண்டும். அதுவே எம் அரசியலை சரியான திசையில் பயணிக்க வழி சமைப்பதோடு மக்களை திரட்சி கொள்ளவும் செய்யும். எமது அரசியல் வழி பயணம் உயிர் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அது தொடர்பான ஆழமான அரசியல் சிந்தனை மக்கள் பயப்படுத்துவதன் மூலமே எமது அரசியல் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக இவ் வருடம் தியாக சுடர் ஏற்றுவோம். ஒன்றான மக்களாக எழுவோம்.

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண