நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி அமைச்சும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் ஒரு விதமான விளக்கமும், பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றுமொரு விதமான விளக்கங்களையும் முன்வைத்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு இந்த இந்த நிதி மோசடி தொடர்பிலான உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய கடன் தரப்பாளியாக வேடமிட்ட போலி நபராலா அல்லது உத்தியோகபூர்வ அவுஸ்திரேலிய கடன் தரப்பாளிகளாலா அல்லது நமது நாட்டு இலங்கை பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் அல்லது வெளிநாட்டு வெளி வளங்கள் திணைக்களத்தாலா ? யாரின் தவறு காரணமாகவா இந்த சம்பவம் இடம்பெற்றது என்பதை அறிய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த விவரங்களை, இது சார்ந்த தகவல்களை நாட்டிற்கு முறையாக தெரிவிக்க தற்போதைய அரசாங்கத்தால் இதுவரையிலும் முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேன, நா உயனே அரியதம்ம தேரரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான புண்ணிய நிகழ்வு இன்று (24) விகாரை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்றதன் பிற்பாடு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி ஜனவரியிலேயே இந்த பிரச்சினை கண்டறியப்பட்டு பல மாதங்கள் இரகசியமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், ஜனவரியில் கண்டறிந்தும் மார்ச் வரை விசாரணைக் குழுவை ஏன் நியமிக்காமல் இருந்தீர்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது.

இந்த தகவல் வெளியாகும் வரை நிதி விடயங்களில் முக்கிய பொறுப்பை கொண்ட பாராளுமன்றத்திற்கு இந்த மோசடி குறித்து ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது மிகப் பாரதூரமான பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனில் ஜயந்த பிரதி அமைச்சர் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய அரசுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது நேர்ந்தது போலவே இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்களிலும் பணம் இழக்கப்பட்டிருந்தால் இதன் உண்மைத் தண்மையை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். பல மாதங்களாக இந்த விடயத்தை மறைத்து வைத்ததுக் கொண்டிருந்தது ஏன் என்பது பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இது மிகப் பாரதூரமான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நடந்த மோசடி சம்பவம் மிகவும் பாரதூரமானது. நமது நாடு பல இறையாண்மைப் பொறுப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ள ஒரு நாடாகும். இந்த பொறுப்புகளை நிறைவேற்றும்போது ஒரு நாடாக, ஒரு அரசாங்கமாக, நிதி அமைச்சாக வினைத்திறனற்ற முறையில் நடந்து கொண்டால், நாட்டைப் பற்றி சர்வதேசத்திற்கு மோசமான செய்தியே செல்லும்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகள், தொழில் முயற்சியாண்மைகள், பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் பேச்சுகளுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நாடாக சர்வதேசத்தில் எமக்கு இடமிருக்காது. இதனால் நாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை உலகிற்கு எம்மால் முன்வைக்க முடியாமல் போகின்றன. முதலீட்டு ஊக்குவிப்புக்கு இது தடையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிப்படையான விசாரணை சபையை நியமிப்பது இங்கு அரசாங்கத்தின் கடமையாக காணப்படுகின்றன. சர்ச்சைக்குரிய மோசடி நடந்த நிறுவனம், அதன் அதிகாரிகளை நியமித்து விசாரணை நியாயமாக நடத்த முடியாது. ஆகையினால் உண்மையான வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி இது தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். இந்த மோசடி திருட்டால் இந்த அரசாங்கம் இயலுமையற்ற அரசாங்கம் என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் சைபர் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாவிட்டால் நாட்டின் ஏனைய பாதுகாப்பு மற்றும் ஏனைய சைபர் பாதுகாப்புகள் தொடர்பில் நினைத்துப் பார்க்க முடியுமா? இந்நிலையில் ஜனாதிபதி உண்மையை பேச வேண்டும். இந்த சம்பவம் அரசாங்கத்தின் இயலாமையையும், வினைத்திறனில்லாத தன்மையையும், செயலற்ற தன்மையையும் நாட்டிற்கே காட்டிவிட்டது. ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்த ஸ்மார்ட் ஆட்சிக்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் இயலாமை மிக்க ஆட்சியையே நடத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்