நமது மக்கள் அனுபவித்த துயரங்களால் நமது அடையாளம் சிதைந்துவிடவில்லை. அதிலிருந்தே அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘தமிழ் சமூக நினைவுச் சின்னம்’ (Tamil Community Memorial) திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பிறைக்குமரன் பேரின்பராசா, தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேணல் தரத்திலிருந்த தனது தந்தையின் வீரம் மற்றும் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்ததுடன், அவரது தைரியத்திற்கும் தியாகத்திற்கும் மதிப்பஞ்சலி செலுத்தினார்.

பேரின்பராசா தனது ஆறு வயதில், தனது தாயார் மற்றும் தம்பியுடன் தமிழீழத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிகழ்வில் பேசிய பேரின்பராசா:

“தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர், லெப்டினன்ட் கேணல் அக்பர் என்ற எனது வீரமிக்க தந்தையின் பெயரை நான் தாங்கி நிற்கிறேன்” என்று கூறினார்.

“முள்வேலிகள், அரண்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின்னால் கழிந்த எனது சிறுபிராயத்தை நான் நினைவு கூர்கிறேன். அது எங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எந்தவொரு குழந்தையும் அறியக்கூடாத ஒரு குழப்பம் அது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், எங்களது சுதந்திரம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் தினசரி நினைவூட்டும் ஒன்றாக அது இருந்தது.

அப்படியிருந்தும், சுதந்திரத்தின் உண்மையான விலையைப் பற்றி நான் நினைக்கும் போது, நான் ஒரு கருத்தியலைப் பற்றி நினைப்பதில்லை, முகங்களைப் பற்றித்தான் நினைக்கிறேன் – மாவீரர்களைப் பற்றித்தான் நினைக்கிறேன்.”

அவரது முழுமையான உரை கீழே:

“என் பெயர் பிறைக்குமரன் பேரின்பராசா. தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர், லெப்டினன்ட் கேணல் அக்பர் என்ற எனது வீரமிக்க தந்தையின் பெயரை நான் தாங்கி நிற்கிறேன். இங்கு வரையான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனது தாயாரின் கைகளைப் பற்றியபடியும், என் தம்பியை என் அருகிலும் வைத்திருந்ததைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில், ஒரு ஆறு வயதுச் சிறுவனாக நான் ஆஸ்திரேலியா வந்தடைந்தேன். எந்த நாடும் இல்லை, எந்தவொரு நிச்சயத்தன்மையும் இல்லை, நாங்கள் மட்டும்தான் இருந்தோம்.

முள்வேலிகள், அரண்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின்னால் கழிந்த எனது சிறுபிராயத்தை நான் நினைவு கூர்கிறேன். அது எங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எந்தவொரு குழந்தையும் அறியக்கூடாத ஒரு குழப்பம் அது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், எங்களது சுதந்திரம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் தினசரி நினைவூட்டும் ஒன்றாக அது இருந்தது. அப்படியிருந்தும், சுதந்திரத்தின் உண்மையான விலையைப் பற்றி நான் நினைக்கும் போது, நான் ஒரு கருத்தியலைப் பற்றி நினைப்பதில்லை, முகங்களைப் பற்றித்தான் நினைக்கிறேன் – மாவீரர்களைப் பற்றித்தான் நினைக்கிறேன்.

அவர்கள் எங்களது சுதந்திரத்தை வெறும் கொள்கையாக நம்பியவர்கள் மட்டுமல்ல, அதற்காகத் தங்களது இரத்தத்தைச் சிந்தியவர்கள். ஒரு நாளில் நாம் இது போன்றதொரு இடத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் நம்பிக்கையைச் சுமந்து போர்க்களங்களில் நின்றார்கள்.

வளர்ந்து வரும் போது, மாவீரர்கள் எனக்கு ஏதோ தூரத்து மாவீரர்களாகத் தெரியவில்லை. தங்களை விடப் பெரிய ஒரு விஷயத்தை (தாயகத்தை) நேசிப்பது என்றால் என்ன என்பதற்கு அவர்கள் ஒரு வாழும், மூச்சுவிடும் நினைவூட்டலாக இருந்தார்கள். என் தந்தை லெப்டினன்ட் கேணல் அக்பர் அந்த அன்பின் வடிவமாகத் திகழ்ந்தார். அளவற்ற துணிச்சலும், அதற்கும் மேலான அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு மனிதர் அவர். அவர் தனது மகன்களுக்காக மட்டும் போராடவில்லை, தலைநிமிர்ந்து, கைகளில் சுதந்திரத்துடன் வளரத் தகுதியுடைய ஒவ்வொரு தமிழ்க் குழந்தைக்காகவும் அவர் போராடினார். போர்க்களத்தில் என் தந்தை காட்டிய வீரம் மற்றும் புகலிடம் தேடிச் செல்லும் போது என் குடும்பம் எதிர்கொண்ட வலிமிகுந்த சகிப்புத்தன்மை ஆகியவையே இன்று நான் உங்கள் முன் நிற்பதற்குக் காரணங்களாகும்.

புலம்பெயர்ந்து வாழும் இளந்தமிழர்களாகிய நமக்கு, நமது அடையாளத்தைக் கையாள்வது என்பது மிகவும் சிக்கலான ஒரு பயணமாகும். வளர்ந்து வரும் போது, போரின் கொடூரமான யதார்த்தமும் தமிழ் இனப்படுகொலையும் பெரும்பாலும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டன. கற்பனை செய்ய முடியாத அதிர்ச்சிகளிலிருந்து தப்பிப்பிழைத்த குடும்பங்கள், சில சமயங்களில் அதை வீட்டில் அமைதியாகவே வைத்திருந்தன. தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒன்றை நமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்பினார்கள் – பயமில்லாத ஒரு சிறுபிராயம், பாதுகாப்பு என்பது ஆடம்பரம் அல்ல, அது ஒரு உறுதிமொழி என்பதை உணர்த்தும் ஒரு வாழ்க்கை.

ஆனால் உண்மை என்னவென்றால், நமது மக்கள் எதை அனுபவித்தார்களோ, நமது மக்கள் எதிர்கொண்ட வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் நாம் யார் என்பதை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. என் அம்மா எப்போதும் எங்களுக்கு நினைவூட்டுவது போல், நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று நாம் நிற்கும் இடத்தில் நிற்பதற்கு உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், கடந்த கால நினைவுகள் இல்லாத ஆசி என்பது துரோகமாகும்.

எனவே, பாதுகாப்பான வலயங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள் மந்தைகளைப் போல் திரட்டப்பட்டு, அங்கேயே படுகொலை செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை, தாய்மார்களை, தந்தையர்களை மற்றும் குழந்தைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவர்கள் பொய்களைக் கூறி ஏமாற்றப்பட்டு, கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

நமது மக்கள் அனுபவித்த துயரங்களால் நமது அடையாளம் சிதைந்துவிடவில்லை. அதிலிருந்தே அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சோதனைகள், இன்னல்கள் மற்றும் கற்பனை செய்ய முடியாத இழப்புகள் என்பன நாம் மறைக்க வேண்டிய வடுக்கள் அல்ல – அவைதான் நாம் யார் என்பதை உருவாக்கும் உண்மையான காரணிகள்.”

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி