தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது- பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாசனம் அழியும் தருணத்தில் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொமும்பில் சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது. அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள் இன்று நாட்டு மக்களின் பசியையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் கவனத்தில் கொள்ளாது இருக்கின்றனர்.

டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் சாமானிய மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வறுமையில் வாடும் மக்கள் ஒரு வேளை உணவை உட்கொள்வதற்கோ அல்லது பிள்ளைகளுக்கு ஒரு கோப்பை பால் கொடுப்பதற்கோ பெரும் சிரமப்படுகின்றனர். இவ்வாறான சூழலில், தற்போதைய ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் செயற்படும் சில குழுக்கள் மகா சங்கத்தினரையும் பௌத்த சாசனத்தையும் திட்டமிட்டு அழிக்க முனைந்துள்ளன. இந்த ஆபத்தான போக்கை தடுத்து நிறுத்துவதற்கு மகா சங்கத்தினர் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

வெறும் தானம் பெற்றுக்கொள்வதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாது, சாசனம் அழியும் தருணத்தில் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, இந்த ஆபத்தான அரசியல் போக்குகளைத் தடுக்க மகா சங்கத்தினர் முன்வர வேண்டும்.

கடந்த தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்துவதற்குச் செயற்பட்டவர்கள், தற்போது அந்த அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறியமை குறித்து வெட்கப்பட வேண்டும். வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

மக்கள் பசியால் வாடும் நிலையில், அரசாங்கம் இவ்வாறான அசமந்தப் போக்குடன் இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போதைய அரசு மக்களின் சுமையை உணராமல், தாங்கள் பெற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவே முயற்சிக்கிறது

எனவே, இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் டிராக்டர் சின்னத்துக்கு அதிகாரத்தை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். எமது நாட்டை அழிவில் இருந்து மீட்கவும், தற்போதைய அரசாங்கத்தின் பிடியில் இருந்து நாட்டைப் பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Screenshot_20260601_013658_YouTube

இலங்கையில் விபத்து: வெசாக் தன்சலவில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மதுபோதையில் வந்த வாகனம் மோதி 6 பேர் பலி!

June 1, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு மீகொட சந்திக்கு அருகே உள்ள வெசாக் தன்சல (Vesak dansala) ஒன்றில் வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின்

photo-collage.png (43)

கனடாவில் ‘தமிழர் சேனையின் பொன்னகவை 50’ இசைப்பேழை வெளியீட்டு விழா!

June 1, 2026

தமிழர் சேனையின் பொன்னகவையை முன்னிட்டு கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தால் இசைப்பேழை வெளியீடு 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி

3Q3JPJUE7BHN7LHPZLRMNGTNJQ

நோர்த் யார்க்கில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ‘பலர் காயம்’ என காவல்துறை தகவல்

June 1, 2026

நோர்த் யார்க்கில் (North York) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை

toronto police15

ரெக்ஸ்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: காவல்துறை தகவல்

June 1, 2026

ரெக்ஸ்டேல் (Rexdale) அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை

713003786_122206969994330171_8828615223462009648_n

திருடப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் லாரிகளுக்கு எரிபொருள் நிரப்பிய மோசடி: ஒன்டாரியோ போலீசார் சந்தேக நபர்களைத் தேடுகின்றனர்!

June 1, 2026

திருடப்பட்ட கிரெடிட் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி, வணிக ரீதியிலான லாரிகளுக்கு (Commercial trucks) தொடர்ந்து எரிபொருள் நிரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட

patrick brown

கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை விரைவாக நாடுகடத்துங்கள்” – கனடா பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன்

June 1, 2026

கனடாவில் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் கனடா குடியுரிமை பெறாதவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பிராம்ப்டன் (Brampton) மேயர்

ve

வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்களைக் கார் மோதியதில் 6பேர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்!

June 1, 2026

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 1, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

Patha

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது- பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

June 1, 2026

இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள்

sanakyan

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் – சாணக்கியன்

June 1, 2026

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பழைய தேர்தல் முறைமையின்

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்