தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார்.

சரத் பொன்சேக்காவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானதாகும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சரத் பொன்சேகா காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த அறிக்கையால் தனது அரசியல் பிரதிபிம்பத்துக்கே களங்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ச, புலிகள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தபோது சுடுமாறு உத்தரவிட்டதாக கூறுகிறார்.

ஆனால் இப்போ, கோட்டாபய எதிரியை சரணடையச் சொல்லியபோது தான் அவர்களை அழித்ததாக தெரிவிக்கிறார். இந்தக் கருத்துக்கு தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்கள் என்ன பதிலளிக்க போகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச சரணடையுமாறு கூறியபோது தான் அவர்களை அழித்ததாக கூறுகிறார். பொன்சேகா காட்டிய வீடியோவில் ஷவேந்திர சில்வாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து அல்ல.

அது வேறு ஒரு தரப்பின் பரிந்துரையாக இருக்கக்கூடும். வெளிநாட்டு தொடர்புகளை கொண்டிருந்த தமிழீழ விடுதலப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய முப்பது ஆண்டு யுத்தத்தின் இறுதியில் ‘சரணடைதல்’ என்பது ஒரு படைத் தளபதியின் மட்டத்தில் தீர்மானிக்கப்படக் கூடிய எளிய செயல் அல்ல அது அரசியல் மற்றும் சர்வதேச இடைதரகர்களின் உயர்மட்டத் தீர்மானமாகும்.

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று