தங்களுக்கு ஒரே சமயத்தில் மூன்று தேசிய விருதுகள் கிடைத்த சந்தோஷத்தை புகைப்படங்களுடன் ஷேர் செய்திருக்கிறார் நயன்தாரா. மேலும் விருதுகள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை விருதுகள் வழங்கும் விழா நடந்தது. தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் படத்திற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் நடத்தி வரும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நெற்றிக்கண் மற்றும் கூழாங்கல் ஆகிய படங்களுக்கும் தமிழக அரசு விருது கிடைத்தது. இதையடுத்து மூன்று விருதுகளுடன் அழகாக ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் நயன்தாரா.
அறம் மதிவதனி கெட்டப்பில் விருதுகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு நயன்தாரா கூறியதாவது, அறம் படத்திற்காக மாநில விருது அளித்து கவுரவித்த தமிழக அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நெற்றிக்கண், கூழாங்கல் படங்களுக்கு மாநில அரசு விருதுகள் கிடைத்ததற்கும் நன்றி.