ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம்

நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருப்பினும், உலக சந்தையில் ஏற்படக்கூடிய விலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத் தேவைகளுக்கான கையிருப்புகளைச் சீராகப் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. எரிவாயு சேமிப்பிற்கான களஞ்சிய வசதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குறுகிய கால மூலோபாயங்களைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து

சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடைகளால் கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது. இலங்கையுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றும் கப்பல் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம்

நாட்டில் தற்போது போதியளவு உணவுக் கையிருப்பு உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் இதன்போது உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், போர்ச் சூழலால் பணவீக்கம் அதிகரித்து சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சுற்றுலாத் துறை மற்றும் விமானப் போக்குவரத்து

ஐரோப்பிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை உறுதிப்படுத்த விமானப் போக்குவரத்துத் துறையில் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், தற்போது இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

புதிய முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்

இச்சூழ்நிலையில் முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, ‘தரவு மையங்கள்’ (Data Centers) போன்ற நவீன தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்க விசேட சலுகைப் பொதியொன்றைத் தயாரிக்குமாறு டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையிலான குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்