போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 20மூ முதல் 30மூ வரை பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதமானோர் டுபாய், கட்டார் அல்லது அபுதாபி ஆகிய விமான நிலையங்கள் ஊடாகவே வருகின்றனர். தற்போது நிலவும் யுத்த சூழல் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (03) கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர், மோதல்கள் ஆரம்பமான கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் நேற்று வரை 205 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 107 விமானங்கள் இலங்கைக்கு வரவிருந்தவை என்பதுடன், 98 விமானங்கள் இலங்கையிலிருந்து புறப்படவிருந்தவை ஆகும்.

ஐரோப்பாவிலிருந்து வரும் விமானங்கள் மத்திய கிழக்கு வான்பரப்பைத் தவிர்த்து மாற்று வழிகளில் வருவதாகவும், இதனால் ஏற்படும் எரிபொருள் செலவு அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கான பயணப்பொதி (Luggage) வரம்புகளை விதிக்க விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி ரோஹந்த அத்துகோரள, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியமானது இலங்கையின் சுற்றுலா வருகையில் பாரிய பங்களிப்பு செய்கிறது. இந்த மோதல்கள் காரணமாக முதலில் அந்த வருகைகளை நாம் இழக்க நேரிடும். ஆனால், வளைகுடா பிராந்தியமே இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தங்கிச் செல்லும் (Transit) இடமாகும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நேரடி விமான வசதிகள் இல்லாத நாடுகளின் பயணிகளும் இதன் ஊடாகவே வருகின்றனர். இந்த விமான நிலையங்கள் மூடப்பட்டால், ஐரோப்பிய பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும்.

மேலும், எரிபொருள் விலை 100 – 120 டொலர்களாக அதிகரித்தால் அது உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறி, ஐரோப்பிய பயணிகளின் முடிவுகளையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இந்த பாதிப்பை ஈடுகட்ட இந்திய, அவுஸ்திரேலிய, ஜப்பான் மற்றும் கொரிய சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஐரோப்பாவிற்கான நேரடி விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும். மோதல்களில் சிக்காத துருக்கியின் ‘டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி விமான சேவைகளை விரிவாக்க வேண்டும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நலின் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் எனும் இலக்கை அடையக்கூடிய சாத்தியக்கூறுறுகள் இல்லை. இதன் காரணமாக வாரத்திற்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பக்கூடும் என்றும் சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்

doug-ford-ontario-premiere-february-7-2023

தனியார் விமான கொள்வனவு சர்ச்சை: டக் ஃபோர்டின் செல்வாக்கு சரிவு – லிபரல் கட்சியுடன் கடும் போட்டி

April 30, 2026

28.9 மில்லியன் டொலர் செலவில் தனியார் ஜெட் விமானம் ஒன்றை கொள்வனவு செய்த விவகாரத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மற்றும்

Thish-Web-Thumb-35-1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்குத் தெரிந்திருந்தது: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றில் தெரிவிப்பு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை

1291252

“இருநாட்டுத் தமிழ் மீனவர்களும் ஒன்றுபட வேண்டும்” – இலங்கை அரசின் சதியை முறியடிக்க சீமான் அறைகூவல்!

April 30, 2026

சென்னை: நாகை மற்றும் ஈழத்துத் தமிழ் மீனவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

deccanherald_2025-03-12_d00voed2_F8mAdg4WMAA4o57

ஐடி துறையில் ஏஐ (AI) அதிரடி: காக்னிசன்ட் நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் பணிநீக்கம் – ‘ப்ராஜெக்ட் லீப்’ திட்டத்தால் அதிர்ச்சி!

April 30, 2026

சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஐடி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தொடர்ந்து, முன்னணி ஐடி நிறுவனமான

c69c8b147d0d5d078abc023c0ff8632e

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது!

April 30, 2026

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி

3e586c045ab0f90c81787c9b5cee4d6017742641998201179_original

“தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு” – சாத்தான்குளம் கொலையாளிகளின் தூக்கு தண்டனை மேல்முறையீடு ஜூன் 4 முதல் தினசரி விசாரணை!

April 30, 2026

மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட