மாமல்லபுரம்:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் இன்று தவெக-வில் இணைந்தனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அவர்களுக்குக் கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றனர். சி.விஜயபாஸ்கர் மட்டுமல்லாது, எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் என அ.தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்வில் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர்.
சுமார் 200 பஸ்கள் மற்றும் 600 கார்களில் புதுக்கோட்டை, கரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்திருந்தது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. 208 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் என அ.தி.மு.க.-வின் முக்கியத் தூண்கள் தவெக-வில் இணைந்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் வளர்ச்சியை உணர்த்தும் விதமாக இந்த மாபெரும் இணைப்பு விழா அமைந்திருந்தது.
#CVijayabaskar #MRVijayabaskar #TVK #ADMK #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #MassJoining #Politics2026 #PoliticalSwitch #TamilNaduPolitics #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash