சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு வீதியில் உள்ள ‘மஹகிரிதம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமை தொடர்பில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட நிபுணர்கள் குழுவொன்று அந்த இடத்திற்குச் சென்று, தற்போது நிலவும் பூமி உறுதியற்ற தன்மை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, அந்த பயணப் பாதையை சீரமைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, தற்போதுள்ள சூழ்நிலையில் ஹட்டன் நுழைவாயில் ஊடாக குறித்த உறுதியற்ற வலயத்தின் ஊடாக சிவனொளிபாத மலைக்கு செல்வதை மட்டுப்படுத்த வேண்டும் என பொலிஸ் அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, ஹட்டன் நுழைவு வீதி ஊடாக சிவனொளிபாத மலைக்குச் செல்வது ஆபத்தான நிலைமையாகக் காணப்படுவதால், வழிபாட்டிற்காக மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அந்த பயணப் பாதையில் மட்டுப்படுத்தல்களை மேற்கொள்ள நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும், சிவனொளிபாத மலை யாத்திரையை மேற்கொள்ள எதிர்பார்க்கும் பக்தர்கள், தமது பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது, நிலவும் சீற்றமான வானிலை மற்றும் பயணப் பாதைகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்படுமாறும் பொலிஸ் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

சிவனொளிபாத மலை யாத்திரை பருவம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற உடுவப் பௌர்ணமி தினத்தில் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக