சென்னை:
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி. முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கவர்னர் தற்போது கேரளாவில் இருப்பதால், அவர் சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து முறைப்படி புகார் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், வேலுமணி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி திடீரென எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “நேற்று வரை வேலுமணியுடன் இருந்தேன், இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்” என்று அவர் கூறியிருப்பது வேலுமணி – சி.வி. சண்முகம் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், சி.வி. சண்முகம் அலுவலகத்தில் வேலுமணி தரப்பினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#ADMK_Split #EPSvsVelumani #GovernorVisit #BreakingNews #May15 #TamilNaduPolitics #AiadmkCrisis #AntiDefectionLaw #EdappadiPalaniswami #CVShanmugam #KCVeeramani #Uturn #RajBhavan #TNAssembly #PoliticalWar #TamilNews #VijayAsCM #PartyDiscipline #LeadershipTussle #FortStGeorge_“`