கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை:

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் திமுக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து, தவெக சார்பில் வி.எஸ்.பாபு களமிறங்கினார். தேர்தல் முடிவுகளில் மு.க.ஸ்டாலினை விட வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) மறுஆய்வு செய்ய வேண்டும் எனத் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, சீல் வைக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கொளத்தூர் தொகுதிக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும், தவெக சார்பில் வி.எஸ்.பாபுவின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாட்களாக இந்த வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4-வது நாளாக வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.

இந்நிலையில், ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, \”கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக இல்லை. எனவே, இந்த முறைகேடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்\” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் போட்டியிட்ட தொகுதியிலேயே தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாகத் திமுக குற்றம் சாட்டியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

#KolathurConstituency #MKStalin #EVM #DMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #TVK #VSBabu #PoliticalUpdate #ElectionCommission #TamilNewsLive

WEST JET

ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தக் கெடுவுக்கு முன்னதாக 81 விமானச் சேவைகளை ரத்து செய்தது வெஸ்ட்ஜெட் (WestJet)

August 1, 2026

வெளியிடப்பட்ட நேரம்: ஆகஸ்ட் 01, 2026, காலை 8:16 (EDT) | கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 3 மணி நேரத்திற்கு முன்

default (45)

சஸ்காட்செவன், பிரின்ஸ் அல்பெர்ட்டில் பெண் படுகொலை: 2 சிறுவர்கள் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

August 1, 2026

பிரின்ஸ் அல்பெர்ட் (Prince Albert) நகரில் 27 வயதான டைனா கௌதியர் என்பவரின் மரணம் தொடர்பாக இரண்டு சிறுவர்கள் மீது

default (44)

ஷம்பாலா இசை விழாவில் காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு: குடும்பத்தினரும் பொலிஸாரும் உறுதி

August 1, 2026

பி.சி. (B.C.) மாநிலத்தில் நடைபெற்ற ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் பாதுகாப்பாகக்

MAHARA2

மஹர சிறைச்சாலை வன்முறையில் கைதி ஒருவர் பலி; 6 பேர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று

6

கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக பகிரங்க குற்றச்சாட்டு!

August 1, 2026

சென்னை: நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத்

FJ2EC5CVSSM7SDYWIOEWAVR7XY

கிரெமோனா (Cremona) அருகே 21 வயது பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து தீவிர விசாரணை

August 1, 2026

அல்பர்ட்டா (Alta.), கிரெமோனா அருகே பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

P4SXUOOD6FCQNOVEGHD67CWGZU

நோர்த் யார்க்கில் (North York) நெடுஞ்சாலை 400-ஐ முடக்கிய கொடூர விபத்து: ஒருவர் பலி

August 1, 2026

சனிக்கிழமை காலை நோர்த் யார்க்கில் உள்ள நெடுஞ்சாலை 400 (Highway 400)-ல் ஏற்பட்ட கொடூர வீதி விபத்து காரணமாக, வடக்கு

5

200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? – சீமான் ஆவேச கேள்வி!

August 1, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை

4

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

August 1, 2026

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

3

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை

gan

பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார்

mi

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

August 1, 2026

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில்