கிரீன்லாந்து மீதான ட்ரம்பின் ஆதிக்க முயற்சிக்கு எதிராகப் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தங்களின் ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து மீது அதிக செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் செலுத்த முயற்சிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் தலைநகர் நூக்கில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒன்றுதிரண்டு பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டென்மார்க் நாட்டின் கீழ் ஒரு தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்துக்கு, ட்ரம்பின் சிறப்புத் தூதரான ஜெஃப் லேண்ட்ரி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இப்போராட்டம் வெடித்துள்ளது.

“எங்கள் அரசாங்கம் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திடம் கிரீன்லாந்து ஒருபோதும் விற்பனைக்கு அல்ல என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது” என்று இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த 37 வயதான அக்கல் குலுக் ஃபோன்டைன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நகர மையத்தின் ஊடாக அணிவகுத்துச் சென்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், “கிரீன்லாந்து, கிரீன்லாந்து மக்களுக்கே!” மற்றும் “அமெரிக்காவே வெளியேறு” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் புதிய அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தை நோக்கித் தங்களின் முதுகைக் காட்டியவாறு அமைதியாக நின்று தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ட்ரம்ப்பின் நிலைபாட்டினை நோக்கும் போது, தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்க்டிக் தீவினை கட்டுப்படுத்த ட்ரம்ப் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

அமெரிக்கா இதனைத் தன்வசப்படுத்தாவிட்டால், இத்தீவு சீனா அல்லது ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் அபாயம் இருப்பதாக வொஷிங்டன் தரப்பு வாதிடுகிறது.

அமெரிக்காவின் இந்த நகர்வுகள் உள்ளூர் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், டென்மார்க்கிற்கான அமெரிக்க தூதர் கென்னத் தூதரகத் திறப்பு விழாவின்போது பேசுகையில், “அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு பலப் பிரயோகத்தையும் பயன்படுத்தாது; கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்களே தீர்மானிப்பார்கள்” எனத் தெரிவித்து நிலைமையைத் தணிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது