கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன பிரபல நடிகர் படுகொலை!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்திலுள்ள ‘லயன்ஸ் பே’ (Lions Bay) பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பிரபல நடிகர் ஒருவர், படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கருதி அந்நாட்டுப் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

45 வயதான ஸ்டீவர்ட் மெக்லீன் (Stewart McLean) எனும் இந்நடிகர், கடந்த மே 15 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கடந்த மே 18 அன்று ஸ்குவாமிஷ் (Squamish) பிராந்திய அரச மாகாண காவல்துறைக்கு (RCMP) உத்தியோகபூர்வமாகத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

வான்கூவர் (Vancouver) நகருக்கு வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லயன்ஸ் பே பகுதியில் உள்ள அவரது இல்லத்திலேயே மெக்லீன் இறுதியாகக் காணப்பட்டதாகப் பொலிஸ் அதிகாரி வெனெசா முன் (Vanessa Munn) தெரிவித்துள்ளார்.

ஸ்டீவர்ட் மெக்லீன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘பேர்ஜின் ரிவர்’ (Virgin River) மற்றும் ‘மர்டர் இன் எ ஸ்மால் டவுன்’ (Murder in a Small Town) உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற ஒருவராவார்.

முன்னதாக, மே 19 ஆம் திகதி மெக்லீனின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்ட பொலிஸார், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, மே 20 ஆம் திகதி காலை லயன்ஸ் பே தேடல் மற்றும் மீட்புக்குழுவினர் (Search and Rescue) அப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்த போதிலும், அன்றைய தினமே அக் குழுவினர் தற்காலிகமாகத் தங்களது தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டனர்.

“இவ்விடயம் குறித்து ஸ்குவாமிஷ் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட புலனாய்வு விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில முக்கிய சான்றுகளின் அடிப்படையில், மெக்லீன் ஒரு திட்டமிட்ட படுகொலையின் (Homicide) மூலமே உயிரிழந்துள்ளார் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் கிடைத்துள்ளன” எனப் பொலிஸ் அதிகாரி வெனெசா முன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, இத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட அதே தினத்தில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘ஒருங்கிணைந்த படுகொலை புலனாய்வுக் குழு’ (IHIT) இந்த வழக்கின் விசாரணைகளைத் தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளது.

மெக்லீனின் உடல் எங்கு கண்டெடுக்கப்பட்டது அல்லது மீட்கப்பட்டதா என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் காவல்துறை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. எவ்வாறாயினும், பிரன்சுவிக் கடற்கரை (Brunswick Beach) பகுதியில் அமைந்துள்ள மெக்லீனின் வீட்டிற்கு அருகிலுள்ள இரயில் தண்டவாளங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதி ஆகியவற்றில் படுகொலை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதிர்ச்சியில் மூழ்கிய அண்டை வீட்டாரும் சமூகமும்:

மெக்லீனின் நீண்டகால அண்டை வீட்டாரான ரஸ் மேக்லிஜான் (Russ Meiklejohn) மற்றும் அவரது மனைவி டொரதி ஆகியோர் இச் செய்தி குறித்து மிகுந்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர். மெக்லீன் மிகவும் அன்பானவர் என்றும், இந்த சிறிய சமூகத்தில் அவர் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார் என்றும், அவருக்கு யாராவது தீங்கு விளைவிக்க நினைப்பார்கள் என்பதைத் தங்களால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பெருமளவிலான ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். இக் கொலைச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருப்பின், உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு படுகொலை புலனாய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்