காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உடனான கலந்தாய்வு

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
விசாரணைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகளைத் திறம்படச் செயற்படுத்துவதற்கு, காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் குறித்த ஒரு முழுமையான புரிதல் தேவைப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காக, OMP யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் ஒரு கலந்தாய்வு நிகழ்வினை காணமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக தலைமையக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (23.04.2026) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களுக்கு காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் (OMP) சட்டத்தின் அம்சங்கள், சிவில் அமைப்புக்களின் பங்களிப்புகள் மற்றும் OMP யுடன் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வழிகள் குறித்து தெளிவூட்டல்களை வழங்கி வழிகாட்டுவதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இக் கலந்தாய்வில் பின்வருவோரால் பின்வரும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
01.காணாமல் போனோர் அலுவலகத்தின்(OMP) பங்கு, அதிகாரம் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக
திரு. ஏ. என். நுவான் அவர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

02.காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டம், தற்போதைய நிலைமை மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்தும் உறுப்பினர் திரு. மீராக் ரஹீம் அவர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
03.காணாமல் போன நபர்களின் குடும்பங்களின் தேவைகளை OMP பிரதிநிதியால் கண்டறிந்து புரிந்துகொள்ளுதல் தொடர்பாக உறுப்பினர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களாலும் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
04.காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ் தொடர்பான விளக்கத்தினை வடமாகாண பிரதி பதிவாளர் நாயகம் செல்வி ஆனந்தி ஜெயரத்னம் அவர்கள் வழங்கினார்.
மேலும், உளவியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடப்பட்டதுடன், இது கேள்வி பதிலுடன் கூடிய கலந்துரையாடலாகவும் அமைந்திருந்தது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சிவில் சமூக அமைப்புகள் கலந்துரையாடுவதற்கான தனி அமர்வுகளாகவும் அமைந்திருந்ததுடன், OMP பிரதிநிதியின் ஒத்துழைப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது.
இக் கலந்தாய்வில் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், காணாமல் போன ஆட்கள் அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் திரு. த.செல்வகுமார், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. ம கண்ணதாசன், திருமதி. சிவாஜினி புலேந்திரகுமார், திருமதி திவ்யா கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலகர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய நல்லிணக்க அபிவிருத்தி உத்தியவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Dept-Registrations

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 24, 2026

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் (DRP) உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி

kasal

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

April 24, 2026

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும்

he

இலங்கை – ஐ.நா. ஹெயிட்டி அமைதிப் படை நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

April 24, 2026

கரிபியன் நாடான ஹெயிட்டி வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘குழு மோதல் தடுப்புப் படை’ பிரிவில் இலங்கை இராணுவத்தினரை இணைப்பது தொடர்பில்

cyb

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

April 24, 2026

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக

kada

கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’

April 24, 2026

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை,

Johnston-Fernando-1

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை: 4 மாதங்களின் பின்னர் விடுதலை

April 24, 2026

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

arres

இரு வௌிநாட்டவர்கள் சீன சிகரட்டுக்களுடன் கைது

April 24, 2026

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச்

d

நெடுந்தீவில் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

April 24, 2026

நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பான கவனயீர்புப் போராட்டம் இன்று (24) காலை

Ranil-Maithree-Wickremesinghe

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் சி.ஐ.டி விசாரணை

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் தற்போது வாக்குமூலம்

677645448_1488683789323536_3985465687936002925_n

காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உடனான கலந்தாய்வு

April 24, 2026

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு

newindianexpress_2025-04-10_hb1r8dyb_Ramadoss-demotes

பரங்கிப்பேட்டை பாமக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்: ராமதாஸ் தரப்பு கடும் கண்டனம் – குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்!

April 24, 2026

சென்னை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் கபியரசு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பாமக தலைமை

dailythanthi_2026-04-24_w8wfgmvg_CHENNAI-10

“பானை” சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி: பண்ருட்டியில் அதிரடி கைது!

April 24, 2026

கடலூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட