எரிபொருள் விலைகளில் மாற்றம்?

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்த்துள்ளதால் அது இலங்கை எரிபொருள் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் 117 கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் இதற்கு பெரும் காரணமென கூறப்படுகிறது.

மேலும், உக்ரைனின் 17 ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடந்த ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் குளிர்காலம் வருவதால் கடந்த இரண்டு வாரங்களில் டீசல் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு மேலதிகமாக, 19ஆவது பெகேஜ் என்று அழைக்கப்படும் சீனா உட்பட ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தத் தடைகளுக்கு மத்தியில் ஜிபிஎஸ் சேவைகளை முடக்கி ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு (SHADOW SHIPS) ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அந்தக் கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் போது இறக்குமதி செய்யும் நாடுகளை மாற்றி எரிபொருளை கொண்டு சென்றுள்ளன. அவ்வாறு சென்றாலும் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

இந்த சூழ்நிலையில், அந்தக் கப்பல்கள், ரஷ்யாவிலிருந்து எரிபொருளைக் கொண்டு செல்வதையும் தவிர்த்துள்ளன. இதனால் கப்பல்கள் மூலம் எரிபொருள் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதனால் கப்பல் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இவையும் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடும். எரிபொருள் இறக்குமதியைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினைகள் காரணமாக, இந்த மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை