எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பிரிவினைவாதத்துக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே எனது அரசாங்கத்தின் இலக்காகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற 17ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமக்காக அன்றி ஏனையோருக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் தமது உயிரை தியாயகம் செய்த இராணுவ வீரர்களுக்கும், அவர்களை நாட்டுக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கும் நாடு என்ற ரீதியில் எமது கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர்.

அவர்களில் யுத்தம் செய்தமைக்கான நோக்கம் அமைதியான நாடு, அபிவிருத்தியடைந்த நாடு மற்றும் உலகில் வெற்றி பெறும் நாடு என்பதாகும். இவை அனைத்தையும் கொண்ட இலங்கையை நானும் எனது அரசாங்கமும் உருவாக்குவோம் என்று உறுதியளிக்கின்றேன். இவற்றில் எந்தவொரு விடயமும் எக்காரணத்துக்காகவும் கைவிடப்பட மாட்டாது. எவ்வாறிருப்பினும் அவர்களது அர்ப்பணிப்பினை இவ்வாறு நினைவு கூருதல் மாத்திரம் போதாது.

அவர்களது இறுதி இலக்கான ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். தற்போது நாட்டில் ஒற்றுமையை விரும்பாத ஒரு பாiதையும், ஒற்றுமையை அங்கீகரிக்கும் மற்றொரு பாதையும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் இரண்டாவது பாதையை மாத்திரமே தெரிவு செய்வோம். தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயரை ஸ்திரப்படுத்தியிருக்கின்றோம்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடாக இலங்கையை சர்வதேசத்தால் அங்கீகரிக்கச் செய்துள்ளோம். இதுவே யுத்தத்தில் உயிர்த்த நீத்த இராணுவத்தினரதும் விருப்பமாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித சடலங்களாலும், இரத்த வெள்ளத்தினாலும், வெடி குண்டுகளாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அமைதியால் மாத்திரமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும்.

இராணுவ வீரர்கள் பிரிவினை வாதத்துக்கு எதிராகவே போராடினர். மாறாக மக்களுக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்டவொரு இனத்துக்கு எதிராகவோ அல்ல. வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களால் தான் இந்த பேரழிவை நாடு எதிர்கொள்ள நேர்ந்தது. இன்றைய சமூகத்தில் யுத்தம் சரியானதா இல்லையா என்ற விவாதமொன்று காணப்படுகிறது.

ஆனால் எமது விவாதம் இனியொருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்துவதாகவும். எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. சகல மக்களதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு, சட்டம் அனைவருக்கும் சமமானதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் ஜனநாயகத்தை விரும்பாத ஜனாநாயக ஆட்சியில் பழக்கப்படாத ஒரு குழுவும் நாட்டில் காணப்படுகிறது. அவர்களையும் உள்ளடக்கி சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவோம். யுத்தம் கொடுத்த மோசமான அனுபவங்களிலிருந்து இலங்கையை முழுமையாக மீட்க வேண்டும். அதற்காக சகல பிரஜைகளுக்குமிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான பாலத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான யுத்தத்தை தற்போது எதிர்கொண்டுள்ளோம். அதில் நாம் பெற வேண்டும் என்றார்.

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண