உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க நமக்குக் கட்டாயம் தேவை – பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ

மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் மற்றும் எல் நினோ காலநிலை மாற்றங்கள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமாயின், இலங்கை தனது உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மட்டுமே ஒரே தீர்வாகும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, கடன் மறுசீரமைப்பு மற்றும் வாகன இறக்குமதி வரிகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழல் உலகச் சந்தையில் ஒரு பெரும் நிச்சமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் இலங்கை போன்ற நாடுகளின் எரிபொருள் விலையையும், பணவீக்கத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றன.

இந்த உலகளாவிய அதிர்ச்சிகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், காணிப் பயன்பாடு, மனித வளம் மற்றும் தொழில்துறைகளில் உள்ள தடைகளை நீக்கி உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதற்கான ஒரே வழியாகும்.

அதேபோல, வரவிருக்கும் எல் நினோ காலநிலையால் வறட்சி ஏற்பட்டால், நீர்மின் உற்பத்தி குறைந்து டீசல் மற்றும் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியைச் சார்ந்திருக்க வேண்டியேற்படும். இது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தரக்கூடும்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துதல் குறித்துப் பார்க்கையில், நாம் எமது கையிருப்புச் சேமிப்பில் இருந்து கடனைச் செலுத்தக் கூடாது; அவ்வாறு செய்தால் சர்வதேச கடன் தரப்படுத்தலில் எமது நாட்டின் நிலை மேலும் வீழ்ச்சியடையும்.

எனவே, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் வரும் டொலர்களைக் கொண்டே நாம் கடனைச் செலுத்த வேண்டும் அல்லது பழைய கடன்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தற்சமயம் எமது கடன் தரப்படுத்தல் ஊ1010 மட்டத்தில்தான் உள்ளது, இதனை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காகவாவது குறைந்தபட்சம் டீ மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலமாகச் சந்தைக்குச் சாதகமான சமிக்ஞைகளை வழங்க வேண்டும்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை கூடும் போது உள்நாட்டிலும் விலையை மாற்றுவதே பொருத்தமானது. இலங்கையில் 70 சதவீதத்க்கும் அதிகமான எரிபொருளை வசதி படைத்தவர்களே பயன்படுத்துவதால், மானியங்கள் வழங்குவது அவர்களுக்குத்தான் சாதகமாக அமைகிறது. மேலும், தொடர்ந்து மானியங்களை வழங்க அரசிடம் போதிய நிதி இல்லை.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் வரிகள் குறித்துப் பேசுகையில், தற்சமயம் வாகனங்களுக்கு 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி இவ்வாறான கூடுதல் வரிகளை நீடிக்க முடியாது.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் இந்த கூடுதல் வரிவிதிப்பை நீடிப்பது பொருத்தமற்றது. எனினும், அதனை ஒரேயடியாக நீக்கும் போது, மீண்டும் கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் கடிதங்களை திறக்கச் செய்யத் தொடங்குவார்கள்.

இது சந்தையில் மீண்டும் ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்பதால், அரசு வருமானத்தை ஈட்டுவதைப் போலவே தனது செலவுகளையும் முறையாக முகாமைத்துவம் செய்ய பழக வேண்டும் என்றார்.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்