உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர் நோக்கிய இயற்கை பேரனர்த்தம் காரணமாக பாரியளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பாதிப்புகள் தொடர்பில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற உதவிகளை கருத்திற் கொள்ளும் போது இந்த நிலைமையை புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இரண்டு மில்லியன் டொலர்களையும் இங்கிலாந்து 890000 டொலர்களையும் உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவி தொகைகளின் மூலம் இலங்கையை அந்த நாடுகள் எவ்வளவு இழிவாக கருதுகின்றன என்பது வெளிப்படுவதாக முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு ஒன்று உதவிகள் வழங்கப்படும் போது அதனை குறைத்து மதிப்பிடும் மதிப்பிடும் உரிமை கிடையாது என்ற போதிலும் மாலைதீவு மக்கள் ஒரு மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
மாலைதீவுடன் ஒப்பீடு செய்யும் போது பலம்பொருந்திய நாடுகளின் உதவி தொகை அறிவிப்புக்கள் மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களுடன் இவ்வாறான அனர்த்தங்களின் போது பலம் பொருந்திய நாடுகள் வழங்கும் உதவிகளை ஒப்பீடு செய்தால் அந்த நாடுகளும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவது தெளிவாகின்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.