ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சி எம்.பிக்களின் கோரிக்கையின் பேரிலேயே இச் சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள், திருகோணமலை சம்பவம், வடக்கு கிழக்கில் எழுந்துள்ள பிற நெருக்கடிகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இக் கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கும்; இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியினர் வேண்டுகோள் பிரகாரம் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன், பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளைதம்பி சிறிகாந், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பான விவகாரங்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள், திருகோணமலைப் பிரதேசத்தில் சமீபத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை உள்ளிஜட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.
By C.G.Prashanthan