இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வருகை தரும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (03) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்கள் நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடயமாக உள்ளது.குறித்த விடயத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் வருகையும், அடாவடித் தனமும், வட பகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயத்தில் மௌனமாக இருக்கின்றார். கடற்றொழில் அமைச்சரை நாங்கள் பல தடவை சந்தித்து, பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துள்ளோம். குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும், அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும், இந்த அரசாங்கமும், குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

எதிர்வரும் மே மாதம் தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெற இருக்கின்றது. இந்த நிலையில் இவ்வாறான செயல்பாடுகளும் தூண்டி விடப்படுகிறது. முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு பயணம் செய்த நிலையில், இந்திய மீனவர்களின் வருகை அதனால் எமது மீனவர்களின் பிரச்சினை குறித்து தெளிவுபடுத்திய போதும், சாதகமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது. அரசியலும், எமது வாழ்வாதாரமும் பின்னி பிணைந்த விடயத்தை பார்க்கின்றோம்.

குறிப்பாக வட பகுதி மீனவர்கள் தாக்கப்படுகின்ற அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகின்ற போது இங்குள்ள அரசியல் கட்சிகளாக இருக்கட்டும், குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து உள்ளார்கள். அதை வரவேற்கிறோம்.

இவ்வாறான எதிர்ப்புக்கள் ஊடாகவே அரசாங்கத்தின் சில கொள்கைகளையும்,திட்டங்களையும் மாற்ற முடியும். அதே போன்று ஏன் இந்த மீனவர்கள் விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல் கட்சிகள் ஏன் ஒருமித்த குரலில் இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருக்கிறார்கள். அவர்கள் கூட இந்திய மீனவர்கள் விடையத்தில் மௌனம் காக்கிறார்கள். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இரு தினங்களாகி விட்டது.

மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஏற்பட இழப்புகளுக்கு இது வரை எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். கடந்த வருடம் ஏற்கட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக தமக்கு ஏற்பட்ட பாதிப்பகளுக்கும் எவ்வித நிவாரணங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை.

நாங்கள் உள்ளூரில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற தொழில் முறைமைகளையும் நிறுத்தி தருமாறு அரசிடம் கோரி இருக்கின்றோம்.

அதே சம காலத்தில் இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நாங்கள் முன் வைத்தோம். ஆனால் உள்ளூரில் தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்தி எங்களை திருப்தி படுத்துகின்ற அரசாங்கம் ஏன் இந்திய மீனவர்களின் வருகையை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை தடுக்க வேண்டும் என்பதே எமது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார்.

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்