இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது.

அதேவேளை இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்றும் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழையையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இம்மழை எதிர்வரும் 19.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

இந்த மழை நாளை புதன்கிழமை (17.12.2025) நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை 17.12.2025 கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை முதல் (16.12.2025) வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சற்று பலமான காற்று வீசும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காற்றுச் சுழற்சி இலங்கைக்கு தென்கிழக்காக நிலவுவதாலும் இக்காற்றுச்சுழற்சி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதனாலும் இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை நிலவுவதாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் சற்றுக் கனமழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

ஆகவே மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் (16.12.2025) எதிர்வரும் 19.12.2025 வரை கன மழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் அவதானமாகவும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம்.

வடக்கு, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன. வான் பாயும் நிலையிலும் உள்ளன. இதனால் அடுத்து வரும் நாட்களில் கிடைக்கும் மழை இந்தக் குளங்களின் வான் பாயும் நீரின் அளவை அதிகரிக்க கூடும்.

அதேவேளை நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளதனால் மேலதிகமாக கிடைக்கும் 75 மி.மீ. மழை கூட சில தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆழ்கடற் பகுதிகளுக்கு பலநாட் கலங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்கள் வேகமான காற்று மற்றும் அதிக உயரம் கொண்ட கடலலைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான

photo-collage.png (18)

கம்போடியா-தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்!

December 16, 2025

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள்

v

தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றல் வழக்கு ஒத்திவைப்பு

December 16, 2025

வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம்

sil

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

December 16, 2025

1982ஆம் ஆண்டு நாட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் லெக்

wind

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி…

December 16, 2025

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின்

ba

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து; இருவர் காயம்

December 16, 2025

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா

ce

பதிவு சான்றிதழ்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

December 16, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும்