சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் நிலவிய குழப்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நிலவிய வதந்திகளுக்குத் தனது அறிவிப்பின் மூலம் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆட்சி அமைக்கத் தன்னைத் தேடி வந்த வாய்ப்பை நிராகரித்து, ஜனநாயக மாண்புகளைக் காப்பாற்றியுள்ளார். கடந்த காலங்களில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் குழப்பம் நிலவிய போதும், இதே போன்ற கண்ணியமான நிலைப்பாட்டையே அவர் எடுத்தார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஜனநாயகவாதியைத் தேர்தலில் தோற்கடித்துவிட்டோமே என்று மக்கள் வருத்தப்படும் காலம் விரைவில் வரும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு ஆட்சிக்கு இடையூறு செய்ய மாட்டோம் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, அவர் மக்கள் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டுவதாகவும் ஈஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக தலைவரின் இந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தவெக ஆட்சியமைப்பதற்கான பாதையைச் சுமுகமாக்கியுள்ளது.
#EREswaran #MKStalin #KMDK #Vijay #TVKGovernment #BreakingNews #May7 #TamilNaduPolitics #Democracy #StalinStatement #ThalapathyVijay #VijayAsCM #NoInterruption #DravidianPolitics #KonguNadu #PoliticalEthics #TNElectionResults2026 #NewEraTN #DMK #VictoryForVijay_“`