இந்த வரவு – செலவுத் திட்டம் ஊடாக பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது – சாணக்கியன்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம். தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று (5) நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவு – செலவுத் திட்டம் ஊடாக பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கம் அரச சேவையாளர்களின் சம்பளத்தை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதிகரிப்பதாகவும், வரி குறைப்பதாகவும், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதாகவும் குறிப்பிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ஏதும் நடக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாயின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தில் இருந்து விலக வேண்டும்.

அரசியல் கட்சிகளில் உள்ள அனைவரும் தூய்மையானவர்கள், சிறந்தவர்கள் என்று எவருக்கும் சான்றிதழ் வழங்க முடியாது. தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் தமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தூய்மையானவர்கள், ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் மோசடியாளர்கள் என்று குற்றஞ்சாட்டியது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனை பற்றியே பேசுவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பற்றி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை பேசினார். ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது சிறைக்கைதிகள் எவருமில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். இந்த ஒருவருடத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி கோரியிருந்தோம். இதுவரையில் எமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தின் போது கடுமையான தீர்மானத்தை எடுப்போம்.

எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணிக்கு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, எனக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் செல்ல போவதில்லை என்றார்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி