சியப் போட்டிகளின் பெண்களுக்கான கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவி சாமரி அத்தப்பத்து பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆயிஷா ஸஃபாரின் 71 (40), ஷவால் ஸுல்பிக்காரின் 54 (50), அணித்தலைவி பாத்திமா சனாவின் ஆட்டமிழக்காத 20 (12) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் காவ்யா கவிந்தி 2-0-13-1, சாமரி 4-0-30-1, சுகந்திகா குமாரி 4-0-31-1, மிதாலி அயோத்யா 2-0-15-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 178 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, சாமரியின் ஆட்டமிழக்காத 83 (50), ஹசினி பெரேராவின் 42 (26), இமேஷா டுலானியின் 27 (21), ஹர்ஷிதா சமரவிக்கிரமவின் ஆட்டமிழக்காத 17 (12) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் பாத்திமா 3-0-24-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.