அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் – – மனோ கணேஷன்

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். தேசிய மக்கள் சக்தி முன்னர் கூறிய பொய்களை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையின்றி பொய்களைக் கூறினர். தற்போது அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. தரம் குறைவான நிலக்கரி கொள்வனவினால் இனிவரும் நாட்களில் மின்சார உற்பத்தி குறைவடையும். எனவே மேலதிக மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக நிலக்கரியை கொள்வனவு செய்ய வேண்டியேற்படும். இதனால் செலவும் அதிகரிக்கும்.

தற்போது நிலக்கரியை விநியோகிக்கும் இந்த விநியோக நிறுவனம், முன்னர் அரிசி இறக்குமதி செய்து அப்போது ஏற்பட்ட மோசடிகளால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. அவ்வாறு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துக்கே இந்த அரசாங்கம் நிலக்கரி விநியோகத்துக்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. இந்த மோசடியால் அரசாங்கத்துக்கு 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள் இல்லை என மறுக்கின்றனர்.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஊழல் செய்ததாகவும், தாம் அவ்வாறு இல்லை என்றும் இவர்கள் கூறினர். ஆனால் இன்று அவர்கள் செய்ததையே இவர்களும் செய்துள்ளனர். விரைவில் மீண்டும் எமது ஆட்சி மலரும்.

மக்களுக்கு முறையான ஆட்சி வேண்டுமே தவிர, கண்காட்சியல்ல. தாம் இடதுசாரிகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் ஜே.வி.பி.யின் வரலாற்றை அறியாதவர்கள். இந்திய எதிர்ப்பு கொள்கையினாலேயே றோஹண விஜேவீர ஜே.வி.பி.யை ஸ்தாபித்தார். ஆனால் இன்று வேறு வழியின்றி இவர்கள் இந்தியாவின் கால்களில் சரணடைந்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் எந்த ஆட்சி வந்தாலும் மலையக மக்களின் வாழ்க்கை நிலைமை துன்பம் மிகுந்ததாகவே இருக்கும். 2015 – 2019 மாத்திரமே அந்த மக்களுக்கு பொற்காலமாகும். எனவே தேயிலை மலைகளுக்குள் சென்று தொழிலாளர்களின் கைகளை பார்ப்பதை விட, மலையக மக்களுக்கு வீட்டு மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.

அவர்களை தொழிலாளர்களாக அன்றி பங்காளிகளாக்க வேண்டும். நாம் இது தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். எமது ஆட்சியில் அதனை நிறைவேற்றுவோம் என்றார்.

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று