அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எடடுவதில் இருதரப்பும் இழுபறி

மேற்காசியாவில் பல மாதங்களாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தாயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த வரைபில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் புதிய திருத்தங்களைக் கோரியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அகற்றுவது தொடர்பான விடயங்களிலேயே இந்தத் திருத்தங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது மேசையிலுள்ள புதிய ஒப்பந்த வரைபின்படி , இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்டமாக 60 நாட்களுக்கு வன்முறைகளை முற்றாக நிறுத்துதல், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடுதல், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல், இந்த இராஜதந்திர நகர்வுகள் வெற்றிகரமாக முன்னேறினால், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டு, சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பில்லியன் கணக்கான டொலர் நிதியை அவர்கள் அணுக அனுமதிக்கப்படும் ஆகிய முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எனினும், “எமது நாட்டின் உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரான் உடன்படாது” என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது முதல், இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை நெருங்கிவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவந்த போதிலும், இதுவரை உத்தியோகபூர்வ ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. கடந்த வியாழக்கிழமை இரு நாட்டு அதிகாரிகளும் ஒரு ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை எட்டியிருந்தனர்.

ஆயினும், வெள்ளை மாளிகையின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ஒப்பந்த வரைபில் 3 ஆவது முறையாக மேலும் சில திருத்தங்களை அவசரமாகக் கோரியுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவிற்கு சாதகமான மற்றும் அவரது ‘சிவப்புக் கோடுகளை’ பூர்த்தி செய்யும் ஒப்பந்தத்தை மட்டுமே செய்வார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

“ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற ஒரேயொரு உத்தரவாதம் எனக்குக் கண்டிப்பாகத் தேவை. அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்” என ஜனாதிபதி ட்ரம்ப் பாக்ஸ் நியூஸ் ஊடக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், இந்த அமைதி ஒப்பந்தம் ஜனாதிபதி ட்ரம்பின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தங்களது ஆயுதக் கிடங்குகள் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவின் இந்த கருத்துக்களை ஈரான் நிராகரித்துள்ளது. “இறுதி முடிவு எட்டப்படும் வரை கூறப்படும் அனைத்தும் வெறும் ஊகங்களே” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை முன்னகற வேண்டுமாயின், முடக்கப்பட்டுள்ள தங்களது பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா முதலில் விடுவிக்க வேண்டும் என ஈரான் பிடிவாதம் பிடித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உயர்நிலை அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் நாடு இடைத்தரகராகச் செயற்பட்டு நடுநிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

chemmani 16

தாயத்துடன் எலும்புக்கூடு

June 1, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து

elder

தனியாக வசிக்கும் முதியோர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர கோரிக்கை

June 1, 2026

தனியாக வசிக்கும் முதியோர்கள் மற்றும் தனிநபர்கள் குற்றச்செயல்களுக்கும் ஏனைய ஆபத்துகளுக்கும் இலக்காகும் அபாயம் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள ஸ்ரீலங்கா பொலிஸார்,

toronto police12

கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் போலி கால்பந்து சீருடைகள் பறிமுதல்: டொராண்டோ பொலிஸார் அதிரடி நடவடிக்கை

June 1, 2026

கனடா நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான போலி கால்பந்து ஜெர்சிகள் (Soccer jerseys) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார்

cong

எபோலா வைரஸ் கொங்கோவில் தீவிரமாகப் பரவுகின்றது!

June 1, 2026

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தற்போதைய நிலைமை ‘ஆழ்ந்த கவலையளிப்பதாக’

iran

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எடடுவதில் இருதரப்பும் இழுபறி

June 1, 2026

மேற்காசியாவில் பல மாதங்களாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தாயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச்

d

விண்வெளித் தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் உடல்சிதறி உயிரிழப்பு

June 1, 2026

தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில்

suresh sale

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு

June 1, 2026

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயை, மேலும் 90நாட்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின்

6

10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வவுனியாவில் வர்த்தகர் தலைமறைவு!

June 1, 2026

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு

canada police2666

கிச்சனர் (Kitchener) குடியிருப்பில் ‘திட்டமிட்ட’ துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

June 1, 2026

திங்கட்கிழமை அதிகாலை கிச்சனரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வாட்டர்லூ பிராந்திய

canada police2222

பிராம்ப்டன் (Brampton) குடியிருப்பில் குழந்தை சடலமாக மீட்பு: பெண் ஒருவர் கைது

June 1, 2026

பிராம்ப்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காலையில் அங்கு பொலிஸார்

708168729_1516805196511395_2514990978381416714_n

உளநல விழிப்புணர்வு!

June 1, 2026

உளநல விழிப்புணர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) பி. ப 03.00

மீகொட வாகன விபத்து வழக்கு: நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

June 1, 2026

மீகொட பகுதியில் உள்ள வெசாக் தன்சல் (தானப்பந்தல்) ஒன்றில் இடம்பெற்ற கொடிய விபத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுநர் வரும் ஜூன்