கனடா நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான போலி கால்பந்து ஜெர்சிகள் (Soccer jerseys) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், இந்த அதிரடி சோதனையானது ஒரு மோசடி விசாரணைக்குக் கிடைத்த வெற்றி என்றும், இது குறித்த விரிவான விபரங்கள் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
டொராண்டோ நகரம் இந்த ஜூன் மாதத்தில் பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.