சென்னை:
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக-வில் மிகப்பெரிய பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்தை 5 எம்.எல்.ஏ-க்கள் புறக்கணித்த நிலையில், தற்போது சி.வி. சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏ-க்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது.
தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களில், தற்போது 116 இடங்கள் (காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன்) விஜய்க்கு உறுதியாகியுள்ளது. விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால் விஜய் முதல்வராவது உறுதி என்றாலும், இத்தகைய நூலிழைப் பெரும்பான்மையுடன் 5 ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்வது சவாலானது எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இடதுசாரிகளின் நிபந்தனையற்ற ஆதரவு எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால், நிலையான ஆட்சியை வழங்க அதிமுக-வின் ஒரு பிரிவினர் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் முன்னிலையில் நடந்து வரும் இந்த 36 எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனையில், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நேர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விஜய்யுடன் கைகோர்ப்பதன் மூலம் திமுக-வைத் தனிமைப்படுத்தவும், அரசுக்கு நெருக்கமாக இருந்து அரசியல் லாபம் அடையவும் ஒரு தரப்பு விரும்புவதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக இந்த 36 பேரும் களம் இறங்கினால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#CVShanmugam #ADMK_Split #Vijay #TVK #BreakingNews #May9 #TamilNaduPolitics #PoliticalCrisis #EPV_Vs_CVS #MajorityTest #ThalapathyVijay #VijayAsCM #StableGovernment #StalinVsVijay #ElectionResults2026 #NewGovernmentTN #AssemblyUpdate #TamilNews #VijayMakkalIyakkam #AIADMK_Meeting_“`