முள்ளிவாய்க்கால் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (16) நடைபெற்றது.
இந்நிகழ்வை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு நடத்தியிருந்தது.
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.