விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அகியோரின்
விசேட பங்கேற்புடன் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நிறுவனத்தின் வளாகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான இந்நிறுவனம், தனது பங்குதாரர்களாக உள்ள 325 விவசாயிகளிடமிருந்தும், மேலதிகமாக வேறு 200 விவசாயிகளிடமிருந்தும் நிலக்கடலையைக் கொள்வனவு செய்து வருகின்றது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நிலக்கடலையைப் பெறுமதி சேர் முடிவுப் பொருளாக மாற்றிச் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே ‘வேர்கடலை பிஸ்கட்’அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் கச்சான் பாகுவையும் சந்தைக்கு அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், விவசாய உற்பத்திகளை வெறுமனே மூலப்பொருட்களாக விற்பனை செய்யாமல், இவ்வாறான பெறுமதி சேர் முடிவுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைப் பெரிதும் வரவேற்றார். அத்துடன், ‘யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் நடைமுறை சாத்தியமானதும், இவ்வாறான உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் சர்வதேச ஏற்றுமதித் தரத்துக்குப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு நேரடியாக அனுப்ப முடியும்’ என நம்பிக்கை வெளியிட்டார்.
இதன்போது நிறுவனத்தின் பங்காளர்களாக உள்ள விவசாயிகள் பல்வேறு சவால்களை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
குறிப்பாக, விவசாயப் பயிர்களுக்குக் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாதளவுக்குக் குறைந்த விலையில் விளைபொருட்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் மற்றும் இயற்கை பசளைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குச் சந்தையில் உரிய தனித்துவமும் விலையும் கிடைக்காமை ஆகிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினர்.
விவசாயிகளின் கருத்துக்களுக்குப் பதிலளித்த கௌரவ ஆளுநர் அவர்கள் விளை பொருட்களின் விலைத்தளம்பலைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயப் பருவகால நாட்காட்டியொன்று உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதற்கான தகவல் திரட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் எவ்வளவு உற்பத்தி செய்தாலும், அவற்றைக் கொள்வனவு செய்து இவ்வாறான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் நிறுவனங்கள் தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் இயங்குமாயின் விவசாயிகளின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும், எனத் தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவாக, நிறுவனத்தின் இயந்திரத் தொகுதிகளையும் அதன் தயாரிப்புச் செயற்பாடுகளையும் கௌரவ ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள் நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
default (8)

மக்கள் எதிர்ப்பால் $28.9 மில்லியன் தனியார் விமானத்தை மீண்டும் விற்ற ஒட்டாரியோ அரசு

April 22, 2026

தனியார் ஜெட் விமானம் ஒன்றை வாங்கிய ஒரே வாரத்திற்குள், மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக அதனை மீண்டும்

usa canada

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கனடா சில முக்கியமான விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் -அமெரிக்கா நிபந்தனை

April 22, 2026

தற்போதுள்ள கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தை (CUSMA) மறுஆய்வு செய்யும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கனடாவிடம் இருந்து

7XBCOHOKSBAURBRHSKVEGPXFGQ

ஒட்டாவா வீதி சமிக்ஞைக் காவலர் மரணம்: சாரதி மீது புதிய குற்றச்சாட்டு

April 22, 2026

கடந்த மாதம் ஒட்டாவாவில் வீதி சமிக்ஞைக் காவலர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட

FWKLIZI4LJA7JJYGT2OIRK2B5Q

ஒட்டாவாவில் வாகன விபத்து: 50 வயது பெண் பலி; மூவர் காயம்

April 22, 2026

ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இரண்டு வாகன மோதலில், 50 மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்

missing per fa

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பௌத்தமயமாக்கலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

April 22, 2026

வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை

canada mexi shoot

மெக்சிகோ பிரமிட் தளத்தில் துப்பாக்கிச் சூடு: கனேடிய பெண் பலி – திகிலூட்டும் புகைப்படம்

April 22, 2026

மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற பிரமிட் தளத்தில், பி.சி. (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த பார்பரா வெல்ஷ் மற்றும் அவரது நண்பர்கள் புன்னகையுடன்

carney

அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முடியாது – மார்க் கார்னி

April 22, 2026

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக கனடா இனிமேல் மேலதிக வர்த்தக விட்டுக்கொடுப்புகளை (Trade concessions) செய்யாது என்று பிரதமர் மார்க்

sajith

2.5 மில்லியன் டாலர் திறைசேரி நிதி ஹேக்கர் வசம்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

April 22, 2026

வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, தவறான அறிவுறுத்தல்கள் மூலம் ஹேக்கர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக

madapuram-ajithkumar-high-court-2026-01-23-05-09-34 (1)

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு – சி.பி.ஐ. பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 22, 2026

மதுரை, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம்,

tasmac (2_)

3 நாட்களில் ரூ.400 கோடி விற்பனை! தேர்தல் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு

HGQV6-6asAA_1wl2

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள்

a899a716-d286-4b64-a81f-0220906235a0

எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

April 22, 2026

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான