விஜய் ஆலோசனை; அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா?

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வலுவாக தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க.வை எதிர்க்க இந்த படை போதாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இதற்கான, ஆலோசனையை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்யுடன் மேற்கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆடை விஷயத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்பற்றி, காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டையை விஜய் அணிந்து வருகிறார்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சகோதரர் வீட்டு இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை கேட்டுப் பெற்றதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது, “ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி நடத்தும் நீங்கள், ஏன் தேவையில்லாமல் மத்திய அரசை எதிர்த்து பேசி பகைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சி.பி.ஐ. விசாரணைக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, நீங்கள் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்” என்று ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

அதன்பிறகுதான் தனது பிரசார கூட்டங்களில், மத்திய அரசை விமர்சிப்பதை நடிகர் விஜய் நிறுத்திக்கொண்டார். தற்போது, கூட்டணி குறித்து பவன் கல்யாண் வழங்கிய ஆலோசனையையும் நடிகர் விஜய் ஏற்றுக்கொள்வார் என்றே தெரிகிறது.

நடிகர் விஜய்யிடம் பவன் கல்யாண், “திருப்பதியில் நடந்த பெரும் மாநாட்டில் ஏராளமான மக்கள் வந்திருந்தபோதும், எனது அண்ணன் சிரஞ்சீவியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.

நானும் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் அடிப்படையில் ஒரு சாணக்கியத்தனமான அரசியல் முடிவை எடுக்காமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், குறிப்பாக தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தேன்.

அதன் மூலம் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஜனசேவா அரசியலைத் தக்க வைத்துக்கொண்டேன். எனவே, அதேபோல் நீங்களும் சாணக்கியத்தனமாக செயல்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உங்களுக்கான அரசியல் இடத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், 50 இடங்களுக்கு குறையாமல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கட்சியின் தலைவர் விஜய்யுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இனி இறுதி முடிவை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் எடுக்க வேண்டும். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்காமல், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் காத்திருப்பது இதற்குத்தானாம்.

தற்போது, விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றி பெற்றால், வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவால் அளிப்பதுடன் தேர்தலில் வெற்றி பெறவும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ve

கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு

March 10, 2026

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண

kur

மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

March 10, 2026

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ding

உப்பாறு பகுதியில் 18 டிங்கி படகுகளுடன் இருவர் கைது

March 10, 2026

திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக

yo

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷிதவுக்கு அதி குற்றப்பத்திரிகை

March 10, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம்

sara

யாழ்.சரவணையில் ஆலயச் சிலை உடைப்பு

March 10, 2026

யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்துத்

au

ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸி.பொலிஸார் உதவி

March 10, 2026

ஈரான் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அடைக்கலமளிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களை அணி ஹொட்டலிலிருந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மீட்டெடுத்ததாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு

g

கற்பிட்டியில் கடல் அட்டைகளுடன் ஏழு பேர் கைது

March 10, 2026

கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக

chi

மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

March 10, 2026

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன்

ind

மோடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்? – சுப்ரமணியன் சுவாமி

March 10, 2026

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள

ko

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு!

March 10, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம்

p

பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு பூட்டு, வீட்டிலிருந்தே வேலை

March 10, 2026

ரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ்

5

துப்பாக்கிச் சூடு; மற்றுமொரு சந்தேகநபர் கைது

March 10, 2026

கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி