யாழில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல்- 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசைக்கச்சேரி இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ.முகமது சுல்பீக்கர் அபூபக்கர், இயற்கைவழிச் செயற்பாட்டாளர் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆண்டுதோறும் மாணவர்களிடையே தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் சூழல் பொது அறிவுப் பரீட்சை நடாத்தி பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதி சான்றிதழோடு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

சூழல் பொது அறிவுப் பரீட்சையில் முதலிடத்தை பிடித்து சூழலியல் ஆசான் க.சி குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளாக முதலாம் இடத்தைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்‌ஷிகா மதிவதனன் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த டிலுக்‌ஷினி டன்ஸ்ரன் வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றம்யா றமேஸ் மட்டக்களப்பு சென்.ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த அன்ரனி கிங்சிலி யனுசன் மன்னார் டிலாசால் கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்துராசா அன்ரனி டிலைக்சன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட மாணாக்கர் உழவர் வீட்டுத் தோட்டப் போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களும், தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டின் சிறந்த சூழல் நேயச் செயற்பாட்டாளர் விருதான தாலகாவலர் க.கனகராசா ஞாபகார்த்த விருதினை பல்லுயிர் நிறுவனரான சிவகுமாரன் நிரோசன் பெற்றுக் கொண்டார். சிறுதானிய பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு தேனீ வளர்ப்பு குறுங்காடுகள் உருவாக்கம் உட்படப் பல்வேறு சூழல்நேயப் பணிகளை ஆற்றிவரும் இவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பாடசாலையொன்றைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பசுமை அமைதி விருதுகளைப் பெற்றுக் கொண்டதோடு அதன் அதிபருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைப் பொதுச்செயலாளர் கை. சரவணனும், நன்றியுரையைப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ம. கஜேந்திரனும் ஆற்றியிருந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார். அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக விழா நடந்தேறியது.

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்

Electricity Tariff-710053

மின்சாரக் கட்டணத் திருத்தம்: மே 9 ஆம் தேதி இறுதி முடிவு

April 29, 2026

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் தேதி

Nalinda Jayatissa Cabinet Meet-790605

$2.5 மில்லியன் திறைசேரி திருட்டு: அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை

April 29, 2026

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 2.5 மில்லியன் டாலர் நிதி திருட்டு மற்றும் அது குறித்த விசாரணைகள் பற்றி

(c)PragMatrix

புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்குள் கொண்டு வரலாமா? – சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அவசர முறையீடு!

April 29, 2026

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சமூக