முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு உடனடியாக எதிர்ப்புத்தெரிவித்த துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55 பேருக்குரிய 59.5 ஏக்கர் காணிகளும் 4 பேருக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மைநிலையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவால் இதன்போது இராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5 ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை தாமும் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ரவிகரன் நடவடிக்கை எடுத்தார்.

அதற்கமைய கடந்த 12.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலாளர் அ.உமா மகேஸ்வரனை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை தம்மிடம் கையளிக்குமாறு ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்தார்.

அதற்கமைய 12.01.2026ஆம் திகதியிடப்பட்ட DSM/LAN/KEP/MPP/2025/21ஆம் இலக்க கடிதத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை கடந்த 14.01.2026அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதத்துடன் இணைத்து அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக வாழ்விடத்தை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2026 அன்று கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான கோரிக்கைக் கடிதத்துடன் ரவிகரனால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தவகையில் பதினாறு ஆண்டுகளாகத் தமது சொந்த நிலத்தில் குடியேறக் காத்துக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் குடியிருக்கச்செய்வதற்கு தேவையான உத்தரவுகளையும், உரிய நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு குறித்த ஜனாதிபதிக்கான கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 14.01.2026அன்று நாடாளுமன்ற உறுபினர் ரவிகரன் கேப்பாப்புலவு காணி விடுவிப்புத் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள PS/DA/SAD/06/41-Vol.01ஆம் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்குறித்த விடயம் தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் சனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட 2026.01.14 திகதிய கடிதம் தொடர்பானது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)

அந்த கடிதத்தின் மூலம், முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களால் மாதாந்தம் இந்த அலுவலகத்திற்கு அனுப்பப்படும் காணி விடுவிப்பு பற்றிய முன்னேற்றம் தொடர்பான ஆவணத்தை ஆய்வு செய்தபோது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கப்படுகின்றது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றேன் – எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்

hosp

இலங்கை அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைக்காக 10,000 நோயாளிகள் காத்திருப்பு: மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான பரிசோதனைகளுக்காக சுமார் 10,000 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில்

rain

இலங்கையில் சீரற்ற காலநிலை: மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு

vikatan_2026-05-08_0dw9lsvc_Untitled-8

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை! தவெக-வுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகள் பறிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப்

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)