மீண்டும் போர்! – இஸ்ரேல்

ஆறு வாரங்களுக்கு மேலான போரின் மூலம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் ஆட்சியின் “அடித்தளங்களை குலைத்துவிட்டன” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இரு வார போர்நிறுத்தத்திற்குப் பின்னரும், வாஷிங்டனுடன் இஸ்ரேலின் ஒத்துழைப்பு முந்தையதை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் முக்கிய இலக்குகளை எட்டியுள்ளது என்றும், நாடு “முன்பைவிட பலமாக” உள்ளது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் உள்ளன என்றும், தேவையான எந்த நேரத்திலும் மீண்டும் போருக்கு திரும்பத் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகளின் விளைவாக உருவான போர்நிறுத்தம் குறித்து, தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் செய்யப்பட்டதாகவும், “எங்களை கடைசி நேரத்தில் யாரும் ஆச்சரியப்படுத்தவில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த இரு வார “தற்காலிக போர்நிறுத்தம்” இஸ்ரேலின் இலக்குகளை அடையும் பாதையில் ஒரு கட்டமாக மட்டுமே உள்ளது என்றும், அது இறுதி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, அதன் பலவீன நிலையை காட்டுகிறது என்றும் நெதன்யாகு கூறினார்.

ஹோர்முஸ் நீரிணையை திறந்ததோடு, தடைகள் நீக்கம், இழப்பீடு, நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் லெபனான் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஈரான் கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஈரானின் Fars News Agency இதற்கு முரணான தகவலை வெளியிட்டு, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளிப்பாக ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் செல்லும் போக்குவரத்தை மீண்டும் நிறுத்தியதாக தெரிவித்தது.

மேலும், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் நிலைப்பாடு என்றும் கூறப்பட்டது.

அதே நேரத்தில், அமெரிக்கா–இஸ்ரேல் உறவு மத்திய கிழக்கு அரசியலை மாற்றிவருகிறது என்றும், இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, எங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்று அவர் கூறினார். கடந்த ஒரு ஆண்டில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் இல்லையெனில், ஈரான் ஏற்கனவே அணு ஆயுதம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போது, ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஈரான் இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது;இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு பலமாக உள்ளது என்று நெதன்யாகு தெரிவித்தார்.

போரில் அடைந்த வெற்றிகளை பட்டியலிட்ட அவர், ஈரானின் ஏவுகணை உற்பத்தி அமைப்புகள், அணு திட்டங்கள், தொழிற்சாலைகள், இராணுவ அடித்தளங்கள் உள்ளிட்ட பலவற்றை இஸ்ரேல் அழித்துவிட்டதாகக் கூறினார்.

மேலும், ஈரானின் பல அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நாட்டுக்கு வெளியே அகற்றப்படும் என்றும், அது ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது மீண்டும் போரின் மூலமாகவோ நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேல் இன்னும் சில இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும், அவை ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது போரின் மூலம் கண்டிப்பாக அடையப்படும் என்றும் நெதன்யாகு உறுதியளித்தார்.

“எந்த நேரத்திலும் மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயாராக உள்ளது,” என்று அவர் முடிவில் தெரிவித்தார்.

canada world cup

இஸ்மாயில் கோனேயின் கொடூரமான காயத்திற்குப் பின் சோகத்தில் மூழ்கிய கனடா அணி: ‘அவருக்காக இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்போம்’

June 19, 2026

கால்பந்தாட்டத்தில் நடுகளக் கூட்டணியில் (Midfield tandem) உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவது அவசியமாகும். அதற்கமைய, இஸ்மாயில்

carney33333333333

கத்தாருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 வெற்றிக்குப் பின், வீரர்களின் அறையில் கனடா பிரதமர் கார்னி ஆற்றிய உரை

June 19, 2026

026 ஜூன் 19 கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு,

JMDVZSNVIBCJHLCBSR264K4TN4

டொராண்டோவில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என காவல்துறை அறிவிப்பு

June 19, 2026

டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான

727288134_1590612522484861_5840860557900271912_n

மிசிசாகா நகரில் வயதான பெற்றோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: மகனைத் தேடும் காவல்துறை

June 19, 2026

வியாழக்கிழமை மாலை மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள வீடொன்றிற்குள் வயதான பெற்றோர் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து