2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோக செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதன்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என அறிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.