மனிதப் புதைகுழிகளை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடரும்! – காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டதாகவும், குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதகுறித்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.பிரதீபனின் மேற்பார்வையின் கீழ் கடந்த மார்ச் 30ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டது.

அந்த மண்ணின் தன்மை மற்றும் நீர் இருப்பு என்பவற்றின் காரணமாக அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியான சிரமங்கள் காணப்பட்ட போதிலும், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி அப்பகுதி ஆய்வு செய்யப்பட்டது.

அத்தொழில்நுட்பக் குழுவில் தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்ற இட ஆய்வு அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

அதேவேளை எமது அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கைக் கண்காணித்து வருவதுடன், மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளிலும் முன்னிலை வகித்தனர்.

அத்தோடு முதல் நாள் அகழ்வின்போது தமது அன்புக்குரியவர்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் வரை வருகைதந்திருந்தனர்.

2014 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருக்கக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாட்சியாளர் ஒருவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட குறித்த இடங்கள், 2015 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் ஊடாக தரை ஊடுருவல் ரேடார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்

pima

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: 9 பில்லியன் ரூபா கொடுப்பனவை நிறுத்தி வைத்தது அரசாங்கம்

April 18, 2026

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் தொடர்பான கவலைகள் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும்

photo-collage.png (11)

கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

April 18, 2026

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்