மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் போராட்டங்களைத் தடுக்க முடியாது – முஜிபுர் ரஹ்மான்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால், அதற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்து செல்லும் நிலையில் எதிர்வரும் ஜூன் மாதமாகும்போது அரச ஊழியர்கள், தனியார் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு கோரி வீதிக்கிறங்கும் நிலை இருக்கிறது. இதனை அறிந்துகொண்டே ஜனாதிபதி 2027வரை சம்பள அதிிகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்திருந்தார்.

ஆனால் தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு அதிகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அதற்கு மாற்றமான கருத்தை தெரிவித்து வருகிறார். ஏனெனில் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் காரணமாக சமூகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்று அனைத்து இடங்களிலும் பணி பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. சுகாதார துறையில் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்புித்துள்ளனர். அதேபோன்று கல்வித்துறையில், மறுசீரமைப்பை கொண்டுவந்ததன் மூலம் பாரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று மீனவ பிரஜைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்த பெரும்பாலானவர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் முரண்பட ஆரம்பித்துள்ளனர் என்பதை எங்களுக்கு காணக்கூடியதாக இருக்கிறது.

அதனால் இவர்கள் அரசாங்கத்துடன் மோதும் நிலை ஏற்படும்போது அதனை தடுப்பதற்காக அரசாங்கம் வெள்ளிக்கிழமை அவசகால சட்டத்தை மீண்டும் அனுமதித்துக்கொண்டுள்ளது. தித்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் நூற்றுக்கு 80வீதம் பூர்த்தி செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் அவசரகால சட்டம் எதற்கு என கேட்கிறோம். தித்வா புயல் ஏற்பட்டபோது, அனைத்து துறைகளையும் முகாமைத்துவம் செய்துகொள்வதற்கான ஒரு விடயமாகவே இந்த அவசரகால சட்டம் தேவையாக இருந்தது. தற்போது அந்த நிலைமை முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் மேலும் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டு செல்கிறது.

ஆனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீீடித்துக்கொள்வதற்கான காரணம் என்னவென்றால், எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்குள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது.

அவசரகால சட்டம் தேவையில்லை, அவசரகால சட்டத்தை அடக்கு முறைக்கு பயன்படுத்துவார்கள் என எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தவர்கள் தற்போது எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடும் என அரசாங்கம் அச்சப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

அதனால் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் அரசாங்கத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், அதற்கு எதிராக மக்கள் அணிதிறலுவார்கள். அதனை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது என்றார்.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்