புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரிடம் நேரில் முறையிட்டனர்.

பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கையில்: சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததுடன், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன், வாழ்வாதாரமாக இருந்த விவசாயச் செய்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளைத் துப்பரவு செய்வதற்காக அரசாங்கத்தினால் 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. எனினும், மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களில் கால்நடை இழப்புகளுக்காக 10 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தம்பனைக்குளம் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கால்நடைகளின் அழிவு குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது, “உரிய ஆவணங்கள் இல்லை” என்ற காரணத்தைக் கூறி இழப்பீடுகளை வழங்க மறுப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இவ்விடயத்தில் தலையிட்டால் மட்டுமே தமக்கு நீதி கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த கால்நடைகள் மற்றும் விவசாயப் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

madapuram-ajithkumar-high-court-2026-01-23-05-09-34 (1)

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு – சி.பி.ஐ. பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 22, 2026

மதுரை, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம்,

tasmac (2_)

3 நாட்களில் ரூ.400 கோடி விற்பனை! தேர்தல் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு

HGQV6-6asAA_1wl2

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள்

a899a716-d286-4b64-a81f-0220906235a0

எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

April 22, 2026

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான

22fd51f3-0a87-47ef-8d51-bea6b75043c9

குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

April 22, 2026

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையின் (Kurikadduwan Jetty) இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிதி

ir

அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ ஈரான் எட்டியது; அமெரிக்கா அதிர்ச்சி!

April 22, 2026

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ எட்டிவிட்டதாகவும், அது அந்நாட்டின் ஒரு மறைமுக அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும்

tn-cbe-02-senthilbalaji-issue-7208104_07042026135556_0704f_1775550356_94

“தேர்தலை ரத்து செய்யாதீர்; வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்!” – கோவை தெற்கில் நாம் தமிழர் கட்சி புதிய ட்விஸ்ட்!

April 22, 2026

கோவை, கோவை தெற்கு தொகுதியில் திமுக – அதிமுக இடையே மூண்டுள்ள மோதல், தற்போது நாம் தமிழர் கட்சியின் என்ட்ரியால்

dsdsa

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை – டக்ளஸ் தேவானந்தா

April 22, 2026

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

chemmani

செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

April 22, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் மரபணு (DNA) பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட

bimal

அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் – ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

April 22, 2026

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற

675243063_1495865475232473_7620241294126216761_n

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.

April 22, 2026

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான

677249623_1496653615153659_5798649706921481207_n

மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல்

April 22, 2026

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாகாண காணி ஆணையாளர் திணைக்கள மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல் இன்றைய தினம் (22.04.2026) மாவட்ட அரசாங்க அதிபர்