நாட்டின் உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்கு இணக்கம்

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இதனைத் தெரிவித்தன.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைச் சந்தையில் தாராளமாகப் பேணுவது மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறுபோகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு ஏதுவாக, சந்தையில் போதுமான உரக் கையிருப்பைப் பேண விவசாய அமைச்சும் தனியார் நிறுவனங்களும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதன் அவசியத்தையும், அதில் அரசாங்கம், உர நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய மூன்று தரப்பினரதும் அர்ப்பணிப்புத் தேவை என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதற்காக நிறுவனப் பிரதிநிதிகள் வழங்கும் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.

இலங்கையின் உரக் கையிருப்பு நிலவரம் குறித்த முக்கிய தரவுகள் இதன்போது வெளிப்படுத்தப்பட்டன.

2026 சிறுபோகத்தில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்கு 83,000 மெட்ரிக் தொன் மற்றும் ஏனைய பயிர்களுக்கு 42,000 மெட்ரிக் தொன் என மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இம்முறை தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் திகதி நிறுவனங்களிடம் 95,000 மெட்ரிக் தொன் மற்றும் விநியோகஸ்தர்களிடம் 7,000 மெட்ரிக் தொன் என 102,000 மெட்ரிக் தொன் யூரியா காணப்பட்டது.

கடந்த இரு வாரங்களில் 27,000 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 17ஆம் திகதி நிலவரப்படி நிறுவனங்களிடம் 68,000 மெட்ரிக் தொன் மீதமுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11,000 மெட்ரிக் தொன் மாத்திரமே விற்பனையாகியிருந்தது. ஆனால் உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உரத்தைச் சேகரித்ததால், இந்த மார்ச் மாதத்தில் இதுவரை 27,000 மெட்ரிக் தொன் விற்பனையாகியுள்ளது.

மேலதிகமாக 77,000 மெட்ரிக் தொன் யூரியா ஓடர் செய்யப்பட்டுள்ளது. இதில் 21,000 மெட்ரிக் தொன் இந்த மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இலங்கையை வந்தடையும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு நகரை அண்மித்த களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்கான கடன் வசதிகளை வழங்குதல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

நெல் மற்றும் மரக்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

IUSF-Basil-malwana-house

மல்வானையில் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘உரிமையாளர் அற்ற’ காணியை ஆக்கிரமித்ததுபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

May 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்

dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்

rain-rules

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

768-512-26672389-thumbnail-16x9-shan

“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!

May 14, 2026

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த

687648807_1285529470437523_5068884044641172277_n4

“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக

1fb8d4e582643c30a07cba7b79d80a531778748271620113_original

“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

May 14, 2026

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்

ff4c6bd1bec4c8927e87c50e0deb633b_original

திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,

dmk-stalin

“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

May 14, 2026

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

image1-2026-05-14t131334-184-1778744675

“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

May 14, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது

nana

நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

put

சீரற்ற காலநிலை; புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

May 14, 2026

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

dd

திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026)