திமுக – காங்கிரஸ் கூட்டணி கை கொடுக்குமா? காலை வாருமா காங்கிரஸ்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டு வென்று கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்பினர்.

இதனால், உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும், இதுபற்றித் திமுக தலைவர்கள் யாரும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.

கூட்டணி நீடிக்குமா அல்லது கழன்று விடுமா என்ற சூழலில் கடந்த டிச. 3 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி இன்னும் வலுவாகத்தான் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆகாது எனத் திட்டவட்டமாக நிகழ்ச்சியொன்றில் கூறிவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னால் செய்யும் இதுபோன்ற ‘ஸ்டண்ட்கள்’ கடும் பின்னடைவையே கொடுத்திருக்கின்றன. இந்தப் போக்கால் காங்கிரஸ் மட்டுமின்றிக் கூட்டணிக் கட்சிகளும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கின்றன.

மத்தியில் ஆட்சியைப் பறிகொடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற வேலைகளை காங்கிரஸ் செய்திருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்தும் அப்போதும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீட்டு பிரச்சினையால், ‘நீ உன் வேலையைப் பார்; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ எனத் தனியாக வேட்பாளர்களை அறிவித்து தனது ஸ்டைலில் போட்டியிட்டு வென்றார் முதல்வர் மமதா. மேற்கு வங்கத்தில் திரிணமூல் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் – திமுக இடையிலான தேர்தல் கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் துவங்கி 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை காங்கிரஸும் திமுக-வும் ஒன்றாகவே இணைந்து போட்டியிட்டன.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, அத்தனை இடங்களிலும் தோற்றது.

பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டம், இளைஞர் அணி மாநாடு, மகளிர் மாநாடு என எதையாவது கூட்டி பார்த்திருக்கிறோமா? தேர்தல் வந்தால் ஏதாவது ஒரு கூட்டணியில் பல்வேறு இழுபறிக்குப் பின்னர் தேர்தலை வேண்டா வெறுப்பாக சந்திப்பதைத்தான் காண முடிகிறது.

அதேவேளையில், ‘இறுமாப்புடன் இருநூறு வெல்வோம்’ எனத் தொடர்ந்து கூறிவரும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் அதிக இடங்களை ஒதுக்கிவிட்டால் பெரும்பான்மைக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இழுபறி தொடர்ந்து வருகிறது.

கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் மட்டும் திமுக வென்றது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைந்த பின்னரும் அதிமுகவுக்கான தனி செல்வாக்கு தொடர்ந்தாலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை, அதிமுகவுக்கான பின்னடைவாகக் கூறப்படுகிறது. அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறக் கூடிய வலுவான கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி கருதப்படுகிறது.

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்