தற்போது நிலவும் சீரற்ற வானிலையில் மாற்றம் ஏற்படுமா?

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், அதிக நீர்மட்டம் கொண்ட நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் லசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களில் 65% நீர் நிரம்பியுள்ளதாகவும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வெஹெரகல நீர்த்தேக்கம் வான்பாய்வதால் கதிர்காமம் பகுதிக்கு ஓரளவுக்கு அபாய நிலை காணப்படுவதாகவும், மாணிக்க கங்கையைப் பயன்படுத்தும் மக்கள் ஆற்றின் நீர்மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், இதுவரை பெரிய அளவிலான வெள்ள அபாயம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவிக்கையில்:

அடுத்த இரண்டு நாட்களுக்கு இதேபோன்ற மழை நிலவரம் தொடரும். தற்போதுள்ள குறைந்த அழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் ஏற்படக்கூடும். மே 15ஆம் திகதிக்குப் பிறகு தற்போதுள்ள மழை வீழ்ச்சி படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்படலாம். இதனால் மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அது குறித்த வானிலை அறிவிப்புகளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை எதிர்பார்க்கப்படலாம் என்றும், இது ஒரு புயல் நிலை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், அந்தந்த நேரத்தில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டே இந்த எதிர்வுகூறல்கள் செய்யப்படுவதால், இதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்

arr

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மயானத்தில் இருவர் கைது

July 26, 2026

பொரலஸ்துவை – பெல்லன்வில உணவக உரிமையாளருக்குச் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்த துப்பாக்கித்தாரியும் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்று ஒரு மணி