வாஷிங்டன் டி.சி. | ஏப்ரல் 26, 2026
வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாக்குதலாளியின் நோக்கம் மதம் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலாளியின் பின்னணி குறித்த ட்ரம்ப்பின் பார்வை:
துப்பாக்கிதாரி கோல் ஆலனின் (Cole Allen) நோக்கம் குறித்து செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, அந்த நபரின் இதயத்தில் நீண்ட காலமாக “வெறுப்பு” குடிகொண்டிருந்ததாக ட்ரம்ப் தெரிவித்தார்.
“இது ஒரு மத ரீதியான விஷயம் (Religious thing). அவர் தீவிரமான கிறிஸ்தவ எதிர்ப்பு (Strongly anti-Christian) மனநிலை கொண்டவராகத் தெரிகிறார்,” என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சந்தேக நபரின் தாக்குதலுக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் பதவியின் ஆபத்துகள்:
தனது பதவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்துப் பேசிய ட்ரம்ப், “நீங்கள் ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிபராக (Consequential president) இருக்கும்போது, சாதாரண அதிபரை விட உங்களுக்கு ஆபத்து அதிகம்,” என்று கூறினார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது இந்தப் பதவி இவ்வளவு ஆபத்தானது என்று தான் முழுமையாக உணரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலை:
துப்பாக்கிதாரி கோல் ஆலன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். “அவரது எஞ்சிய வாழ்நாளில் அவர் பல பெரிய பிரச்சினைகளைச் சந்திக்கப் போகிறார்,” என்றும் ட்ரம்ப் தனது பேட்டியின் போது எச்சரித்துள்ளார்