சிறுநீரகம் தானம் செய்த பாலஸ்தீனருக்கு கனடிய அகதி அந்தஸ்து மறுக்கப்படும் அபாயம்?

ஒட்டாவா — முகமது அல் ஹிந்தி (Mohammed Al Hindi) என்ற பாலஸ்தீன அகதி விண்ணப்பதாரரின் கோரிக்கை, கனடா அரசின் புதிய எல்லைச் சட்டமான C-12 காரணமாக இப்போது ஆபத்தில் உள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரிலிருந்து தப்பிக்கத் தனது குடும்பத்துடன் காசா பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, 2023 கோடையில் சுமார் ஏழு வாரங்கள் அவர் கனடாவுக்கு வந்திருந்தார். கனேடியக் குடிமகளாக இருக்கும் தனது சகோதரிக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதே அவரது அப்போதைய வருகையின் நோக்கமாக இருந்தது.

கனடாவின் புதிய C-12 சட்டத்தின்படி, ஜூன் 3, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு அகதி விண்ணப்பம் தாக்கல் செய்பவர்கள், அவர்கள் முதன்முதலில் கனடாவுக்குள் நுழைந்த தேதியிலிருந்து ஓராண்டுக்கு மேலாகியிருந்தால், அவர்களது விண்ணப்பம் அகதிகள் தீர்ப்பாயத்திற்கு (Immigration and Refugee Board) அனுப்பப்படாது. இந்த ஓராண்டு விதி ஜூன் 24, 2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன் தேதியிட்டு (Retroactive) அமல்படுத்தப்பட்டுள்ளது.

“நான் ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக கனடாவுக்கு வந்தேன். ஒரு மனிதாபிமானச் செயலைச் செய்தேன். 2023-இல் எனக்குக் கனடாவில் தங்கும் எண்ணம் இருக்கவில்லை, அதற்கான காரணமும் இல்லை. எனது நாட்டில் எனக்கு வேலை, குடும்பம், கார், வீடு என அனைத்தும் இருந்தது,” என்று முகமது அல் ஹிந்தி லண்டன், ஒன்ராறியோவிலிருந்து தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து கனடாவை விட்டு வெளியேறினார். காசாவிற்குத் திரும்பினார். (ஐந்து நாட்களில் போர் தொடங்கியது).

வசந்த காலம் 2024: குடும்பத்துடன் எகிப்திற்குத் தப்பினார்.

பிப்ரவரி 2025: விசேட விசா திட்டத்தின் கீழ் மீண்டும் கனடா வருகை.

4 செப்டம்பர் 2025: அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார்.

அவர் முதல்முறை நுழைந்தது ஆகஸ்ட் 2023 என்பதால், அவர் விண்ணப்பித்த செப்டம்பர் 2025-க்குள் ஓராண்டு காலம் கடந்துவிட்டது. இதனால் அவர் தகுதியற்றவராகக் கருதப்படலாம் என குடிவரவுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

முகமது அல் ஹிந்தியைப் போலவே சுமார் 30,000 அகதி விண்ணப்பதாரர்கள் இத்தகைய சிக்கலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

டொராண்டோவில் வசிக்கும் ஒரு ஈரானியப் பெண், தனது மகனுக்கு உதவ 2022-இல் கனடா வந்தார். ஈரானிய அரசால் தடைசெய்யப்பட்ட ஊடகத்தில் பணிபுரிந்த அவரது பெயர் கசிந்ததால், இப்போது நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து என அகதி விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவரும் ஓராண்டு கால அவகாசத்தைத் தாண்டியுள்ளதால் சட்டச் சிக்கலில் உள்ளார்.

மௌரித்தேனியா (Mauritania) மக்கள்: குடும்ப வன்முறை மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தப்பி வந்த மூவர், நாடு கடத்தப்பட்டால் கொல்லப்படும் அபாயத்தில் இருப்பதாக அவர்களது சட்டத்தரணி கூறுகிறார்.

அகதி விண்ணப்பம் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டால், அவர்கள் ‘நாடு கடத்தலுக்கு முந்தைய அபாய மதிப்பீடு’ (Pre-removal risk assessment) என்ற செயல்முறைக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால், இதில் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும், சட்டத்தரணிகள் வாதிட அங்கு அனுமதியில்லை என்றும் எட்மன்டனைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி ஜூமன் எல்-அஸ்மார் (Jouman El-Asmar) கூறுகிறார்.

குடிவரவு அமைச்சர் லேனா தியாப் (Lena Diab) கூறுகையில், அகதிகள் முறையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையாகப் பாதுகாப்புத் தேவைப்படுபவர்களுக்கு விரைவாக உதவி கிடைப்பதை உறுதி செய்யவுமே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். 2025 இறுதியில் அகதி விண்ணப்பங்களின் தேக்கம் 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

முகமது அல் ஹிந்தி இப்போது மிகுந்த கவலையில் உள்ளார். “காசாவில் இப்போது மருத்துவமனைகளோ, சுத்தமான நீரோ எதுவுமில்லை. எனக்கு ஒரே ஒரு சிறுநீரகம் தான் உள்ளது. நான் எங்கே செல்வேன் என்று தெரியவில்லை,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய