கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கண்காணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா–தென் கொரியா இராணுவ பயிற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Korean Central News Agency வெளியிட்ட படங்களில், ஒரு மாநாட்டு அறையில் அமர்ந்திருந்த இருவரும், ஒரு திரையில் Choe Hyon என்ற போர்க்கப்பலில் இருந்து ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காணொளி மூலம் ஏவுகணை ஏவுதலைக் கவனித்த கிம் ஜோங் உன், “வலுவான மற்றும் நம்பகமான அணு போர்தடுப்பு திறனை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தியதாக KCNA தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் அவரது மகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சுமார் 13 வயதாகும் அவரது மகள் Kim Ju Ae, 2022 இறுதியில் இருந்து இராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஆயுத சோதனைகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் தந்தையுடன் தோன்றிவருகிறார்.

கடந்த மாதம் தென் கொரியாவின் உளவு அமைப்பு, கிம் ஜோங் உன் தனது வாரிசாக அவரை அறிவிக்க நெருக்கமாக உள்ளதாக மதிப்பிட்டிருந்தது.

KCNA தகவலின்படி, ஏவப்பட்ட ஏவுகணைகள் வடகொரியாவின் மேற்கு கடற்கரை அருகிலுள்ள இலக்கு தீவுகளைத் துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுதல்கள் கடற்படையின் மூலோபாய தாக்குதல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், படையினரை ஆயுதப் பயன்பாட்டில் பழக்கப்படுத்தவும் நடத்தப்பட்டதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் Choe Hyon போர்க்கப்பலில் இருந்து இதே போன்ற க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கிம் ஜோங் உன் நேரில் கண்காணித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்வில் அவரது மகள் காணப்படவில்லை. இந்த ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் வசந்தகால இராணுவ பயிற்சிகள் தொடங்கிய பின்னர் இடம்பெற்றுள்ளன.

sale

சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

March 11, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்

tha

குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

March 11, 2026

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த

shi

சிறப்பு கப்பல் படை தலைமையக படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பயிற்சி

March 11, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் மூலம் (United Nations Office on Drugs and

ceb v

20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

March 11, 2026

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்

ve

இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

March 11, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்

ch

கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

March 11, 2026

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் –

po

அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

March 11, 2026

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ

Judment

ஊழல் குற்றச்சாட்டு; மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

March 11, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல்

ha

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் பிரதமர்

March 11, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதன்கிழமை (11)

arrest

சட்டவிரோத சொத்து சேகரிப்பு; முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவர் கைது

March 11, 2026

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு

g

சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க

ceb

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

March 11, 2026

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட