கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளுக்காக பதவி நீக்கங்கள் செய்வது அழகில்லை

இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது சிறீநேசன் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி என்பன 76 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றன. இக்காலத்தில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்திருக்கின்றார்களா? சுதந்திரமாக செயற்பாடுகளின் ஈடுபட்டிருக்கின்றார்களா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. குடியுரிமைச்சட்டம், வாக்குரிமைச்சட்டம் என்பன கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்ற மக்களாக மாற்றி விட்டார்கள்.

அந்த அடிப்படையில் தான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தோற்றம் ஆரம்பித்தது. அந்த வகையில் இலங்கையின் சுதந்திர தினம் என்பது எங்களைப் பொறுத்த வரையில் திண்டாட்ட தினமாகவே இருந்து வந்திருக்கின்றது. தென்னிலங்கையில் தான் அது கொண்டாட்ட தினமாக இருக்கின்றது. கடந்த காலங்களிலும் இதனை நாங்கள் திண்டாட்ட தினமானவே அனுஸ்டித்திருக்கின்றோம்.

அந்த இம்முறை சுதந்திர தினத்தையும் கொண்டாட முடியாத திண்டாட்ட தினமாக ஒரு கரிநாளாகவே அனுஸ்டிக்க இருக்கின்றோம். இந்த அரசாங்கம் வந்து ஒரு வருட காலம் தான் ஆகின்றது. நீங்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களா என்று கேட்கின்றார்கள். ஆனால் புதிய அரசாங்கம் வந்த உடனடியாக தேசிய இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைந்தபட்சம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்நடவடிக்கைகளையாவது அவர்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தான் சொல்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான நீதிகள் கிடைப்பதற்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. சிலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் பலர் இன்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பல நட்சத்திரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

கைப்பற்றப்பட்ட நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. எமது மாவீரர்களின் துயிலுமில்லங்களில் சப்பாத்துக் கால்களுடன் இராணுவத்தினர் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது சகோதரர்கள் மறைந்த பிற்பாடும் கூட அவர்களது மயானங்களில் இராணுவ சப்பாத்துக் கால்கள் மிதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அரசியற் கைதிகள் விடுதலை இல்லாமல் இருக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தில் மக்கள் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். தற்போது கிவுல் ஓயா திட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் வாக்குறுதி மீறப்பட்டிருக்கின்றது. எந்தவொரு மாவட்டத்தினதும் குடிப்பரம்பலை மாற்றுகின்ற வகையில் குடியேற்றத் திட்டங்கள் இடம்பெறாது என்ற வாக்குறுதியை அவர் வழங்கியிருந்தார்கள்.

ஆனால் இந்த கிவுல் ஓயாத் திட்டம் தமிழ் மக்களின் குடிம்பரம்பலைக் குறைப்பதற்கான திட்டமாகவும், பெரும்பான்மையினருக்கு ஒரு சாதகமான திட்டமாகவும் இருக்கின்றது. திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்திருக்கின்றார்கள். அது சட்டவிரோதம் என்று தெரிந்தும் அதனை அகற்ற முடியாது என்கிறார்கள் அதேபோன்று தான் தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

சுட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கோவில்கள், தேவாலயங்கள் இடிக்கப்படுகின்ற போது ஏன் சட்விரோதமாக அமைக்கப்படுகின்ற விகாரைகள் மாத்திரம் அப்படியே இருக்கின்றன? எமது மக்கள் எதுவித பயனுமின்றி தெருவில் நிற்கும் போது சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களின் கருத்துகளை மதிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் எமக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள். எனவே அந்த கரிநாள் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சிறிதரன் எம்.பி தொடர்பில் பதில் பொதுச்செயலாளர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார், பதில் தலைவர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார். அவரை நீக்குவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கவில்லையென தலைவர் தெரிவித்திருந்தார். செயலாளர் அவரை நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

நாங்கள் எப்போதும் நேர்மறையான கருத்தினை ஏற்றுக்கொள்பவர்கள். எங்களின் ஆதரவாளர்கள், அபிமானிகள் எங்களிடம் பல்வேறுவிதமான கேள்விகளை கேட்டு குடைந்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது.

தலைவரின் கருத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அவரை நீக்குவது தீர்மானத்தினை இன்னும் எடுக்கவில்லையென்று கூறியிருக்கின்றார்.

பலவந்தமாக நிர்ப்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது கட்சியின் வளர்ச்சியை தூண்டும் என்று சொல்வதை விட கட்சியினை பின்னடையச்செய்யும் என்பதே எனது முடிவு. தலைவர் கூறிய கருத்திற்கு அமையவே நாங்கள் மக்களுக்கு கூறிவருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Carney

கனடா அமெரிக்காவுக்குப் பதிலடி: இன்று புதிய தீர்வை வரி அறிவிப்பு!

August 26, 2026

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா இன்று (25) அறிவித்துள்ளது.

7SIY5K6KDFHIJECXH6BH3FHLGE

கனடா $27.6 பில்லியன் அமெரிக்க இறக்குமதிகள் மீது பதிலடி வரி விதிப்பு – 

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக $27.6 பில்லியன்

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்